Showing posts with label Thanks Guruji. Show all posts
Showing posts with label Thanks Guruji. Show all posts

Monday, 23 May 2011

பைத்தியம் ஆன கதை

ந்தைக்கு போன
அண்ணன்
சாயங்காலம் வரும்போது
சகதியோடு
வந்து நின்றான்
ஏனிந்த கோலமென்று
இடைமறித்து கேட்கையில்
இதுதான்
கட்சி கொள்கை என்றான்

அறுவடைக்கு
போன அப்பா
அரைநாளில்
திரும்பி வந்து
திருவோட்டை கையில் தந்தார்
சோறு போட்ட
நிலமெல்லாம்
கூறுபட்டு மனையாச்சி
ஓடுதான்
மீதமென்றார்

அம்மாவின்
வளையலை
அடகு வைத்த காசில்
கல்லூரி போன தம்பி
கண்ணிரண்டும்
குருடாகி
வாசலில் வந்து
விழுந்தான்
கவர்ந்த நடிகருக்கு
கற்பூரம் காட்டும்போது
கண்களை
சுட்டதென்றான்

ஆசைக் கனவுகளை
அள்ளி சுமந்தப்படி
பள்ளிக் கூடம்
போன தங்கை
கூடாததை
படித்து விட்டு
கருகலைக்க காசு கேட்டாள்

அப்பாவின்
முதுகில்
ஆயிரம் சுமையேற
கணவன்
வீடு
போன அக்கா
குடிகார புருஷனிடம்
விடுதலை
வாங்கித் தாவென்றாள்

மலையேறி படியேறி 
மண்ணில்
உருண்டு புரண்டு
கடுந்தவம்
இருந்து பெற்ற பிள்ளை
பாலுக்கு
அழும்போது
பரிதவிக்க
விட்டுவிட்டு
பத்தினியோ "தொடரை' பார்த்தாள்

இத்தனையும்
நடக்கும் போது
என்னினிய அம்மாவோ
அம்மனுக்கு 
கூழ் வார்த்தாள் 

நெருப்பு பொறி
வந்து
கண்களை ஒருபுரம்
குத்த
கால் கையில்
ஆயிரம் விலங்கு விழ
எப்படி நான்
வாழ்வெதென்று
எதுவுமே புரியாமல்
மனநல
வைத்தியரிடம்
மருந்துக்கு நானும் வந்தேன்