Wednesday, 25 January 2012

முல்லைப் பெரியாறு - உண்மையில் தீர்க்கப்பட வேண்டியது எல்லைப் பிரச்சினையே!


Thanks Keetru (http://www.keetru.com)
மாநிலங்கள் சீரமைப்புச்சட்டம், 1956-ன் பிரிவு 108-ன்படி மாநில அரசு ஒன்று, அதற்கு முந்தைய அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் படியான கடப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கிறது. அப்பிரிவுதான், 1986-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சென்னை மாகாண அரசுக்கும், திருவிதாங்கூர் அரசுக்கும் இடையிலான முல்லைப்பெரியாறு நீரினை தமிழகத்திற்கு வழங்குவதற்கு வகை செய்யும் ஒப்பந்தம் தொடர்ந்து அமுலில் இருந்து வருகிறது என்பதை சட்ட அடிப்படையில் உறுதி செய்கிறது. எனவேதான், அப்பிரிவு கேரள அரசுக்கும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும் மிகவும் எரிச்சல் ஊட்டும் ஒன்றாக உள்ளது. எனவே அப்பிரிவு செல்லத்தக்கதல்ல என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் 2006-ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில், அந்த வாதத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு ஆயத்தின் முன்பு அப்பிரிவின் சட்ட செல்லுபடி குறித்த கேரளத்தரப்பின் கேள்வி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. கேரளத்தரப்பிற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசு என்ன நிலைபாடு எடுத்துள்ளது என்பது நமக்குத் தெரியவில்லை.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு நீரினை பெறும் தமிழகத்தின் உரிமை ஆங்கிலேயர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தினை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதா? என்பது இப்பொழுது எழுந்துள்ள ஒரு முக்கியமான கேள்வியாகும். அதற்கான பதிலை நாம் வரலாற்றிலிருந்தே தேட வேண்டியுள்ளது.
தேவிகுளம் - பீர்மேடு வரலாறு
12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய அரசு வீழ்ச்சியுற்றது. சோழ அரசு பாண்டிய நாட்டை கைப்பற்றியுள்ளது. பாண்டிய அரசன் மாணவிக்ரமா தனது குடும்பத்தினர் மற்றும் பலருடன் தப்பித்துள்ளான். அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் கடுமையான காட்டுப்பகுதியான அகமலையை அடைந்துள்ளனர். அவர்கள், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க கற்கள் கொண்ட பெட்டிகளை செல்வங்களாக கொண்டிருந்தாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான இடமின்றி காடுகளின் வழியே அலைந்துதிரிந்துள்ளனர். பிறகு வன்னேரி என்ற ஊருக்குச்சென்று அங்கு வசிக்க தொடங்கியுள்ளனர். அப்போது, பாண்டிய அரசுக்கு கட்டுப்பட்ட தேனி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளின் குறுநில அரசர்கள் தங்களது மன்னர் தப்பித்து வன்னேரியில் இருப்பதை அறிந்து அவரை சந்தித்து, பாண்டிய நாட்டிற்கு திரும்ப வருமாறு வேண்டியுள்ளனர். ஆனால், மன்னன் மாணவிக்ரமா அவ்வாறு திரும்பி செல்லவில்லை. அப்பொழுது, இளங்காலூர் நாட்டு மன்னன் பாண்டிய மன்னனை வரவேற்றுள்ளான். அங்கு சென்று வசித்த போது, மன்னன் மாணவிக்ரமா இறந்துவிட்டான்.
அதன்பிறகு அவனது மூத்த மகனான குலசேகரன் என்ற இளவரசன் கூடலூர் சென்று வசிக்கவும் அதன் அருகாமையில் உள்ள குறுநில அரசர் களை ஒருங்கிணைக்கவும் விரும்பியுள்ளான். அப்பொழுது, கூடலூருக்கு எதிரே உள்ள பூஞ்சார் என்ற பகுதியின் சேரர் வழி குறுநில அரசன் ஒருவன் இறந்துவிட்டதாகவும் அவ்விடம் விற்பனைக்கு இருப்பதாகவும் அவனுக்கு தெரிய வருகிறது. தன்னிடமிருந்த பொன் மற்றும் மதிப்புமிக்க கற்களை விலையாக கொடுத்து பூஞ்சார் பகுதியை வாங்கியுள்ளான். அது, கூடலூருக்கு எதிர் திசையில் உள்ள ஒரு நிலப்பரப்பு ஆகும். முன்னொரு காலத்தில், கூடலூருக்கு அருகில் உள்ள குமுளி சேரர்களின் தலைநகரமாக இருந்துள்ளது என்பதும் அது குழுமூர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு மற்ற மன்னர்கள் சேர்ந்து, குலசேகர பாண்டியனை பூஞ்சார் (பூனையார் தம்பிரான் அரசு) மன்னனாக அறிவித்து விழா நடத்தியுள்ளனர். அதன்பிறகு, அவன் அங்குள்ள மீனாட்சி ஆற்றின் கரையில் மதுரையை விட்டு வெளியேறும் போது அவனது குடும்பத்தினர் எடுத்துச் சென்ற மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவர் சிலைகளை கொண்டு, அவர்களது குல தெய்வம் மீனாட்சி பெயரில் ஒரு கோவிலை கட்டியுள்ளான். (உயரமான மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள அக்கோவிலை குறித்து நேசனல் ஜியாகிரபி அலைவரிசை ஒரு நிகழ்ச்சியினை ஒளிபரப்பியுள்ளது). அதன்பிறகு அரண்மனை மற்றும் கோட்டைகளை கட்டி உள்ளான். இவ்வாறு பூஞ்சார் அரசு நிறுவப் பட்டுள்ளது. அந்த அரசின் நிலப்பரப்பாக தற்போது கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதியான தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை வட்டங்களை உள்ளடக்கியும் கூடலூர், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட தமிழக பகுதிகள் வரை நீட்டித்தும் இருந்துள்ளது. 16-ஆம் நூற்றாண்டு காலத்தில் தற்போதைய இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி பூஞ்சார் அரசின் ஆளுகையில் இருந்ததை, கேரள அரசின் இணையதளமே தெரிவிக்கிறது. இவ்வாறு பூஞ்சார் அரசு பல நூற்றாண்டுகள் தொடர்ந்துள்ளது.
அதன்பிறகு 1756-ம் ஆண்டுதான் வேனாடு அரசன் என்பவன் பல சிறு அரசுகளை ஒன்று சேர்த்து திருவிதாங்கூர் அரசினை உருவாக்குகிறான். அதாவது, திருவிதாங்கூர் அரசு பூஞ்சார் அரசுக்கு 6 நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பிறகு திருவிதாங்கூர் அரசுக்கும், பூஞ்சார் அரசுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது. திருவிதாங்கூர் அரசும் பூஞ்சார் அரசினை அங்கீகரித்துள்ளது.
அதன்பிறகு 1866ம் ஆண்டு பூஞ்சார் அரசு அதன் ஆளுகைக்குட் பட்டிருந்த ஏலமலைகள் என்று அறியப்பட்ட பகுதியை திருவிதாங்கூர் அரசிற்கு கொடுத்துள்ளது. திருவிதாங்கூர் அரசு 2000 மூட்டைகள் நெல்லினை தொடர்ந்து நிரந்தரமாக ஆண்டுதோறும் பூஞ்சார் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி அப்பகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலப்பகுதி தற்போதைய பீர்மேடு வட்டத்தின் பெரும் பகுதிகளை உள்ளடக்கியதாகும். அதற்குள்தான் முல்லைப்பெரியாறு நீர் பிடிப்புப்பகுதியும் வருகிறது. இவ்வாறு 1866 -ஆம் ஆண்டு முதல்தான் திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்கு மேற்குறிப்பிட்ட நிலப்பகுதி வந்துள்ளது என்பது அறிய வேண்டிய முக்கியச் செய்தியாகும்.
இக்காலத்தில்தான், திருவிதாங்கூர் அரசில் வழக்குரைஞராக பணியாற்றிய ஜான் டேனியல் மன்றோ என்பவன் பூஞ்சார் நிலப்பரப்பினை பார்வையிட்டு, அவை தோட்டங்கள் அமைக்க வாய்ப்பான இடம் என்று தெரிந்து கொள்கிறான். அதன்பிறகு, அவன் பூஞ்சார் அரசுடன் 11. 7. 1877ல்
ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறான். அதன்படி அந்த ஆங்கிலஅதிகாரி ரூ. 5000ஃ- மறுபயனாக கொடுத்தும் ஆண்டு குத்தகைத் தொகை ரூ. 3000 கொடுக்க சம்மதித்தும் அஞ்சுநாடு என்று அறியப்பட்ட பகுதியை (தற்போது தேவிகுளம் வட்டத்தை உள்ளடக்கிய பகுதி) குத்தகைக்குப் பெறுகிறான்.
இதன்பிறகுதான், சென்னை மாகாணமும் திருவிதாங்கூர் அரசும் 1886-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, தற்போதைய பீர்மேடு வட்டத்தின் ஒரு பகுதியான முல்லைப்பெரியாறு பாயும் நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அணையினை அமைத்து சென்னை மாகாணத்திற்கு தண்ணீரை கொண்டுவரும் திட்டத்திற்காக தேவைப்பட்ட 8000 ஏக்கர் அளவு நிலத்தினை 999 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் மூலம் சென்னை மாகாணம் பெற்றது. அப்பகுதியினை ரூ. 6,000,00-த்திற்கு விலைக்கு பெற்றக்கொள்ளுமாறு திருவிதாங்கூர் அரசு சென்னை மாகாணத்தினை கேட்டுக் கொண்டது என்பதும் ஆனால் அதற்கு அப்போதைய ஆங்கிலேய அரசு அனுமதி அளிக்கவில்லையென்பதும் அரசு ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. பூஞ்சார் அரசின் ஒரு பகுதியாக இருந்து திருவிதாங்கூர் அரசிற்கு வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட பகுதியில், அதாவது 1886ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் அரசு பூஞ்சார் அரசிடமிருந்து ஆண்டிற்கு 2000 மூட்டை நெல் வழங்குவது என்ற ஒப்பந்த அடிப்படையில் பெற்ற நிலப்பரப்பின் ஒரு பகுதியில்தான், நீரைத் தேக்கவும் அணை நிறுவவும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் சென்னை மாகாண அரசு திருவிதாங்கூர் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இல்லாவிடில், ஆங்கிலேய அதிகாரி தேவிகுளம் பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் அமைக்க பூஞ்சார் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது போல், சென்னை மாகாண அரசம் பூஞ்சார் அரசுடன்தான் ஒப்பந்தம் செய்திருக்கும்.
ஆங்கிலேய அதிகாரி குத்தகைக்கு பெற்ற நிலத்தில் தோட்டங்களை அமைப்பதற்கு பூஞ்சார் அரசுக்கு கட்டுப்பட்ட அஞ்சுநாட்டின் பழங்குடி தமிழ் குறுநில மன்னன் கண்ணன்தேவர் என்பவன் உதவியுள்ளான். பிறகு மேற்சொன்ன நிலத்தினை ஜேம்ஸ் பின்லே ரூ கம்பெனி லிட் என்ற நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. அதன்பிறகு பின்லே நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் சேர்ந்து 1897-ல் கண்ணன் தேவன் மலைகள் உற்பத்தி நிறுவனம் (வுhந முயயெn னுநஎயn ர்டைடள Pசழனரஉந ஊழஅpயலெ) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளன. தங்களுக்கு தோட்டங்கள் அமைக்க உதவிய அந்த குறுநில மன்னனை நினைவு கூர்ந்து அவனது பெயரினை தங்களது நிறுவனத்திற்கு சூட்டியுள்ளனர். அந்நிறுவனத்தின் மூலம், புதிய புதிய தேயிலைத் தோட்டங்கள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன. மேற்படி நிறுவனம் பிறகு 1963-ம் ஆண்டு டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. பிறகு 1983 முதல் டாடா நிறுவனம் பின்லே நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கி டாடா தேயிலை நிறுவனம் (வுயவய வுநய டுiஅவைநன) என்ற பெயரில் அத்தேயிலைத் தோட்டங்களை நடத்தி வருகிறது. பிறகு, டாடா தேயிலை நிறுவனம்2005-முதல் மீண்டும் கண்ணன்தேவன் மலைகள் தோட்ட நிறுவனம் என்ற பெயரில் தொடர்ந்து தற்போதும் அத்தேயிலைத் தோட்டங்களை நடத்தி வருகிறது. இவ்வாறு 11. 7. 1877ல் பூஞ்சார் அரசினர் ஆங்கிலேய அதிகாரிக்கு குத்தகை ஒப்பந்தத்தின் மூலம் வழங்கிய தேவிகுளம் தேயிலைத் தோட்டங்களை தங்களுக்கு மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று, அந்த அரச குடும்பத்திpன் தற்போதைய வாரிசுகள் டாடா குழுமத்திற்கு எதிராக அங்கு சமீபத்தில்தான் வழக்கிட்டுள்ளனர்.
 இறுதியில், பூஞ்சார் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த ஒரு நிலப்பரப்பினை குறித்து அந்த அரசுக்கும் திருவிதாங்கூர் அரசுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. அதனால் பூஞ்சார் ஆணையம் என்ற ஒரு ஆணையம் 1897-ல் அமைக்கப்பட்டது. அவ்வாணையம் அந்நிலப்பரப்பின் மீதான பூஞ்சார் அரசின் இறையாண்மையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான், பூஞ்சார் அரசின் மொத்தநிலப்பரப்பின் மீதும் திருவிதாங்கூர் அரசு தனது இறையாண்மை அதிகாரத்தை அறிவிக்குமாறும் அவ்வாறு செய்யுமாயின் பூஞ்சார் அரசுக்கு தக்க இழப்பீடு வழங்கலாம் என்றும் அப்போதைய சென்னை மாகாண ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்தான் ஆலோசனை கூறியுள்ளார். அதனடிப்படையில்தான், திருவிதாங்கூர் அரசு 19. 9. 1899-ல் பூஞ்சார் பரப்பின் மீது இறையாண்மை அதிகாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. பூஞ்சார் அரச குடும்பத்திற்கு, பூஞ்சார் பகுதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வழங்குவதாக 19. 9. 1899ல் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு பூஞ்சார் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த அந்நிலப்பரப்பு கி. பி. 1000 வரை சேர அரசின் பகுதியாக இருந்து வந்துள்ளது. பூஞ்சார் அரசு பாண்டிய அரச வம்சாவழியினரால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட அரசாகும். அந்த அரசு இறுதி வரை தங்களை பாண்டிய அரசு என்றே அழைத்துக்கொண்டுள்ளது. முடியாட்சி காலத்தில் ஒவ்வொரு அரசம் தங்கள் அரசின் இறையாண்மை அதிகாரத்தை கடவுளிடமிருந்து பெற்றதாகவே அறிவித்தன. பூஞ்சார் அரசம் தங்கள் இறையாண்மை அதிகாரத்திற்கு மதுரை மீனாட்சியம்மனையே காட்டியுள்ளது. அதன்படிதான், அவர்களால் வெளியிடப்பட்டுள்ள வரி ரசீது சீட்டுகளில் கூட, மீனாட்சியம்மன் துணை என்று எழுதி வெளியிட்டுள்ளது. அவற்றில் தமிழிலேயே கையொப்பம் இட்டுள்ளனர். இவ்வாறு, அந்த அரசு தமிழ் அரசாகவே இருந்துள்ளது. இவ்வாறு, 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை பூஞ்சார் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிலப்பரப்புதான் தற்போதைய இடுக்கி மாவட்டத்தின் வட்டங்களான தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை நிலப்பரப்பாகும். இது முடியாட்சி வரலாறு.
அடுத்து மக்கள் வரலாறு என்று பார்ப்போமாயின், அங்கு பளியர், புலையர், மன்னன், முத்துவான், ஊராளி, மலை அரையன், உள்ளாடன் என்ற பழங்குடி மக்கள் தொன்மை காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர். பளியர் என்ற பழங்குடியினர், பழனி, கொடைக்கானல், சிறுமலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மலைகளில் இன்றும் வசித்து வரும் பழங்குடியினராவர். புலையரும் அதே போன்றேரே. தாங்கள் பாண்டியர் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மன்னர் என்ற பழங்குடியினர், இன்றும் தங்களுக்குள் ஒரு மன்னரை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். முத்துவான் என்ற பழங்குடியினர், பூஞ்சார் மன்னருடன் மதுரையை விட்டு வெளியேறும் போது மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் சிலைகளை தூக்கிக்கொண்டு சுமந்தவர்கள் என்று அறியப்படுகின்றனர். இவ்வாறு அங்குள்ள பழங்குடியினர் அனைவரும் தமிழ் பழங்குடியினர்தான்.
அடுத்து, கம்பம், உத்தமபாளையம் மற்றும் போடி வட்டங்கள் மற்றும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சென்று அப்பகுதியில் குடியேற்றங்கள் அமைத்து வாழ்ந்து வரும் தமிழர்கள் மற்றொரு பிரிவினர் ஆவர். அவர்கள்தான் அங்கு ஏலம், மிளகு போன்ற பயிர்களை சாகுபடி செய்வதற்கான தோட்டங்களை உருவாக்கியவர்கள்.
அடுத்த பிரிவினர்தான் தேயிலைத் தோட்டத் தமிழர்கள். மேற்சொன்ன ஆங்கிலேய தேயிலை நிறுவனங்கள் தேயிலைத் தோட்டங்களை அமைப்பதற்கும், அதன்பிறகு அத்தோட்ட பணிகளைச் செய்வதற்கும் முழு அளவில் தமிழ் தொழிலாளர்களையே உழைப்பில் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்களின் கடின உழைப்பு இல்லாவிடில் அங்குள்ள தோட்டங்கள் சாத்தியமாயிருக்க முடியாது. அத்தொழிலாளர்களில் பெரும்பாலோர் திருநெல்வேலி, செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட ஒடுக்கப்பட்டத்தமிழ் சமூக தொழிலாளர்களே ஆவர்.
திருவிதாங்கூர் தமிழர் போராட்டம்
திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் பெரும்பான்மையினராக வாழ்ந்த 9 வட்டங்களில் தோவாலை, அகஸ்திஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை தென்பகுதி, நெடுவங்காடு கீழ்பகுதி, செங்கோட்டை, உள்ளிட்ட வட்டங்களுடன் பூஞ்சார் அரசின் பகுதியாக இருந்த தேவிகுளம், பீர்மேடு ஆகிய இரு வட்டங்களும் அடங்கும்.
திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்குள் இருந்த மேற்சொன்ன தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்புதான் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பாகும். திருவாளர்கள். நத்தானியல், பி. எஸ். மணி, காந்திராமன், வேலாயுதபெருமாள் பிள்ளை, ஆர். கே. ராம், கே. நாகலிங்கம், ஸ்ரீவி. தாஸ், தோவாலை சிவதானு, அ. அப்துல்ராசாக் உள்ளிட்டோர் அந்த அமைப்பினை தொடங்கி பெரும் போராட்டத்தினை நடத்தினர். பின்னர், அந்த அமைப்பிற்கு திரு. மார்சல் நேசமணி அவர்கள் தலைமை தாங்கினார்.
அப்போராட்டம், ஒரு தேசிய இனத்தினை சார்ந்த மக்கள் தங்களது கூட்டு நலனை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில், தங்களது இனத்திற்கான அரசுடன் தங்களது நிலப்பகுதியை இணைக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட தெளிவான கண்ணோட்டம் கொண்ட ஒரு சீரிய போராட்டமாகும். சாதி, மதம் கடந்து தமிழர் என்ற இன அடிப்படையில் ஒன்று சேர்ந்து நீண்ட போராட்டத்தினை நடத்தினர். ஆனால், தாய் தமிழகத்து இயக்கங்கள், கட்சிகள் அவர்களுக்கு உரிய ஆதரவு அளிக்கவில்லை என்பதுதான் துயரமான செய்தியாகும். அதன் விளைவுதான் இன்று மலையாளிகளால் தமிழருக்கு முல்லைப்பெரியாறு ஆற்று நீர் உரிமையே மறுக்கப்படும் பெரும் துயரத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது!
இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தை நடத்திய காங்கிரஸ்கட்சி, தனது போராட்டத்திற்கு வெகுமக்களின் ஆதரவை பெறுவதற்கு, ஒவ்வொரு மக்கள் கூட்டத்தினரும் தங்களது மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைத்து ஆட்சி அமைத்துக்கொள்வதற்கு தாங்கள் வழிவகை செய்வோம் என்று உறுதி கூறினர். அதனடிப்படையில்தான், காங்கிரஸ் கட்சியே மொழிவாரி அடிப்படையில் தனது மாகாண கிளைகளை அமைத்து மக்களிடம் சென்று ஆதரவு திரட்டியது. ஆனால் ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தினை பெற்ற காங்கிரஸ் கட்சி, தனது வாக்குறுதிபடி செயல்பட விரும்பவில்லை. ஆனால், மக்கள் போராட்டங்கள் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்ற நிலைமையை உருவாக்கின. அதன் காரணமாகத்தான் மொழி வாரி மாநிலங்கள் அமைப்பதற்கான ஆணையத்தினை அமைத்தது. அதில், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த பசல்அலி, குன்சுரு மற்றும் கேரளாவைச் சேர்ந்த கே. எம். பணிக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
அந்தக்குழு, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளிகள் பெரும்பான்மையினராக இருந்த மலபார் பகுதியுடன் பிரச்சனைக்குட்பட்ட தமிழர் பெரும்பான்மையாக இருந்த ஊர்களை கொண்டிருந்த சித்தூர் மற்றும் பாலக்காடு பகுதிகளும் கேரளாவிற்கு கிடைப்பதற்கு பரிந்துரை செய்தது.
ஆனால், திருவிதாங்கூர் - கொச்சி என்று அறியப்பட்ட மாகாணத்திலிருந்த தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படுவதில் மட்டும் நடுநிலையற்று செயல்பட்டுள்ளது. அதன்காரணமாகத்தான், திருவிதாங்கூர் அரசிற்கு உட்பட்டிருந்த மேற்குறிப்பிட்ட 9 வட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நெய்யாற்றின் கரை தென்பகுதி, நெடுமங்காடு கீழ்ப்பகுதி, தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. அவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்க மறுப்பதற்கு ஆணையம் தெரிவித்த காரணங்கள் அறவே நியாயமற்றவை.
தமிழ்நாட்டில் அப்பொழுது, இந்திய தேசியக் கட்சிகளும் திராவிட தேசியம் பேசிய கட்சிகளும் மேற்குறிப்பிட்ட பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படுவதற்கு எந்த குறிப்பிடத்தக்க போராட்டங்களையும் நடத்தவில்லை. அதற்காக போராடிய திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சி மற்றும் ம. பொ. சி. ஆகியோரின் போராட்டத்திற்கு கூட, இக்கட்சிகள் தமிழ்நாட்டு தமிழரை திரட்டி ஆதரவளிக்க மறுத்துவிட்டன.
ஆனால், அதே சமயத்தில், மலையாள காங்கிரஸ் தலைவர்களும் மற்ற கட்சித்தலைவர்களும் ஐக்கிய கேரளம் அமைப்பதில் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையை நிர்பந்தம் செய்து தங்களது திட்டத்திற்கு ஆதரவு திரட்டினர். மலையாளிகள் பெரும்பான்மையினராக இல்லாத பகுதிகளை கேட்டுப்பெறுவதிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளை தக்க வைத்துக்கொள்வதிலும் அவர்கள் அனைத்து அரசியல் சூழ்ச்சிகளையும் செய்துள்ளனர். அவர்களுக்கு, மாநில சீரமைப்பு ஆணையத்தின் உறுப்பினரான மலையாளி கே. எம். பணிக்கரே ஆதரவாக இருந்துள்ளார். அந்த ஆணையத்தின் தலைவரான நீதிபதி பசல்அலி, உத்தரபிரதேசம் - பீகார் எல்லைப்பிரிப்பின் விடயத்தில் தான் அப்பகுதியினைச் சேர்ந்தவன் என்று கூறி ஆணையத்தின் பணியில் பங்கெடுக்காமல் ஒதுங்கியுள்ளார். ஆனால், கே. எம். பணிக்கர் அவ்வாறு செய்யவில்லை. தனது மலையாள சார்பினையும் அவர் மறைத்துக்கொள்ளவில்லை. அவர், அந்த ஆணையத்தில் உறுப்பினராக இருக்க சிறிதும் தகுதியற்றவர் என்று சட்டம் படிக்காத ம. பொ. சி. ஒருவரால் மட்டுமே கேள்வி கேட்க முடிந்ததுள்ளது.
திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றத்தில் தேவிகுளம் - பீர்மேடு என்ற இரண்டு வட்டங்களும் சேர்ந்து ஒரே சட்டமன்ற தொகுதியாக இருந்துள்ளது. இந்திய விடுதலைக்குப்பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தலில் திருவிதாங்கூர் தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற முழக்கத்துடன் போட்டியிட்ட திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சி, அத்தொகுதியில் திரு. சர்மா என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. அங்குள்ள தமிழர்கள் திரு. சர்மாவை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குமுன் அறியப்படாத அக்கட்சிக்கு வாக்களித்து தமிழர்கள், அப்பகுதியினை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தினை தெளிவாக தெரிவித்தனர்.
 தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளில் தமிழர்தான் பெரும்பான்மையினர் என்பதை ஆணையம் மறுக்கவில்லை. மொழி அடிப்படையில் மாநில எல்லைகளை பிரித்துக்கொடுக்க அமைக்கப்பட்ட அந்த ஆணையம் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களைப் பொருத்தவரை ஒரு மொழியினரின் பெரும்பான்மையினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு நிலப்பரப்பு எந்த மாநிலத்துடன் சேர்ப்பது என்பதை தீர்மானித்துவிட முடியாது என்று தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பினையே மறுத்து கருத்து தெரிவித்தது. அங்கு வசித்த தேயிலைத் தோட்ட தமிழர் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினர்களையும் வந்துசெல்லும் மக்கள் என்று கூறி அவர்களது வாழ்விட உரிமைக்கு எதிரான முறையில் கருத்து தெரிவித்தது. அப்பகுதியினை பொருளாதார வளமுள்ள பகுதியாக மாற்றியதில் தமிழர்களின் கடின உழைப்பின் பங்கினையும் மறுத்தது. தோட்டத் தொழிலாளர் அல்லாத மக்களில் கூட மலையாள மக்கள் பெரும்பான்மையினர் என்று ஆணையத்தால் கூறிட முடியவில்லை. ஏனெனில், அது உண்மையில், தமிழ் அரசான பூஞ்சார் அரசுதான் பல நூற்றாண்டுகள் அங்கு ஆட்சி செலுத்தியுள்ளது. பூர்வீக குடிகளாகவும், தொல் குடியினராகவும் தமிழர்தான் இருந்து வந்துள்ளனர். அப்பகுதியில் மலையாளிகள் தொழிலாளிகளாகவோ அல்லது பூர்வீக குடியினராகவோ அல்லது நீண்ட காலம் வசித்து வந்தவர்களாகவோ, எந்த வகையிலும் பெரும்பான்மையினராக அறவே இருந்திருக்கவில்லை. ஆயினும், ஆணையம் அப்பகுதியினை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு பரிந்துரைக்க மறுத்துவிட்டது.
அமைக்கப்படவிருந்த கேரள மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதிகள் எதுவும் இருக்கவில்லை என்பதால் அந்த அரசின் வருமானத்திற்கு பெருமளவில் தேயிலை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய பகுதிகளாக தேவிகுளம்-பீர்மேடு பகுதி இருந்ததால், அவை கேரள அரசிற்கு வருமானம் அளிப்பதற்கு தேவைப்படுவதாக மாநில சீரமைப்பு ஆணையமும் இந்திய அரசும் கருத்துக்கொண்டிருந்துள்ளன. அந்த கருத்தினை வலுப்படுத்தி, இந்திய அரசிலும் காங்கிரஸ் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்திய மலையாளிகள் தங்களது சூழ்ச்சிகள் மூலம் அப்பகுதிகள் கேரளாவிற்கு கிடைக்கப்பெற்றனர். இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் மலையாளிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சாகதமாக இருந்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆணையமே செங்கோட்டை வட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று பரிந்துரைத்த போதிலும், இந்திய அரசு அந்த வட்டத்தின் பாதிக்கு மேற்பட்ட பகுதியை கேரளாவுடன் இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில், இப்பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்த காங்கிரஸ் கட்சியினர், பிறகு மக்கள் போராட்டங்கள் காரணமாக அப்பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர். அதே சமயத்தில் திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றத்தில் தேவிகுளம் - பீர்மேடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. சர்மர் அப்பகுதியினை தமிழர்கள்தான் உழைத்து வளப்படுத்தினர் என்றும் அப்பகுதி தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட வேண்டுமென்றும் வலுவான முறையில் குரல் எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 ஆனால் பிறகு, காங்கிரஸ்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களான காமராசர், பக்தவச்சலம், சி. சுப்பிரமணியம் போன்றோர் அக்கட்சியின் டெல்லி தலைமைக்கு கட்டுப்பட்டு அக்கோரிக்கையை வலியுறுத்தாமல் அமைதிகாத்துவிட்டனர். இதற்கு அப்போது சட்டமன்றத்தில் நடந்த விவாதங்களே சாட்சியமாக உள்ளது. அப்போது சட்டமன்றத்தில் பேசிய திரு. கே. விநாயகம் என்ற உறுப்பினர், தேவிகுளம் - பீர்மேடு பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்புவரை பேசிய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், பிறகு கருத்தை மாற்றிக்கொண்டும் மத்திய அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முரண்பட்டு பேசுவதைக் சுட்டிக்காட்டிய அவர், அதன்மூலம் தமிழர்களின் கோரிக்கை மீது காங்கிரஸ் கட்சி பொறுப்பற்று நடந்துள்ளது என்று குற்றம் சாட்டியதுடன், தேவிகுளம் - பீர்மேட்டில் தமிழ் தொழிலாளர்கள் பல்லாண்டு காலம் வசித்து வருவதையும் அவர்களை வந்துசெல்பவர்கள் என்று ஆணையம் கூறுவது எந்தளவு நியாயமற்றது என்பதையும் குறிப்பிட்டதுடன், அம்மக்கள் அப்பகுதியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டி பேசிய அவர், ஆனால் அவ்வாறு இணைக்காமல் இந்திய அரசு தமிழருக்கு பெரும் கொடுமை செய்துவிட்டது என்றும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் பேசியுள்ளார். இவ்வாறு, இந்திய அரசும் அதன் ஆணையமும் நியாயமற்ற முறையில் பாகுபாட்டுடன் செயல்பட்டு, தமிழ்நாட்டுடன் இணைக்கப்படாமல் போய்விட்ட பகுதிகள்தான் பீர்மேடு -தேவிகுளம் வட்டங்களாகும்.
இந்த தேவிகுளம் - பீர்மேடு பகுதியின் வரலாறும் அங்கு இன்றும் பெரும்பான்மையினராக வசித்துவருபவர்கள் தமிழர்கள்தான் என்ற உண்மையும் அங்குள்ள ஊர்களின் பெயர்களும் அப்பகுதி மீது தமிழர்களுக்குரிய உரிமைகளை நிலைநாட்ட உள்ள மறுக்க முடியாத சான்றுகளாகும். நாம், முல்லைப்பெரியாறு ஆற்று நீருக்கான நமது உரிமையை 1886-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் மட்டும் கோருவது என்பது, தேவிகுளம்-பீர்மேடு பகுதியின் மீது தமிழர்கள் சட்டப்படி கோரிப்பெற வேண்டிய உரிமையை முழுமையாக அறிந்து கொள்ளாத அறியாமையின் பாற்பட்டதாகும். அது, ஒருவகையில் கேரள அரசிற்கு துணை செய்யும் வாதமாகும்.
இந்த நமது வரலாற்று அறியாமையை பயன்படுத்திக்கொண்டுதான், இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் அதில் இப்பிரச்சனை குறித்து எழுதிவரும் இராமசாமி ஆர். ஐயர் போன்றவர்கள், துணிந்து தமிழ்நாட்டிற்கு எதிராகவும் தமிழர் நலனுக்கு எதிராகவும் பரப்புரை செய்ய முடிகிறது. அவர்கள், 1886-ஆம் ஆண்டு ஒப்பந்தம்படியான நிலப்பரப்பில் திருவிதாங்கூர் அரசு ஏதோ பல நூற்றாண்டு காலம் தொடர்ந்து இறையாண்மை செலுத்தி ஆட்சி செய்து வந்தது போன்றும், ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே திருவிதாங்கூர் அரசு அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்து விட்டது என்பது போன்றும், இதன் மூலம் கேரளமக்களுக்கு ஆங்கில ஏகாதிபத்திய அரசினால் பெரிய அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்றும் பொய்யுரைக்கின்றனர். அதனடிப்படையிலேயே, கேரள மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்ககடமைப்பட்டிருக்கவில்லையென்றும் அந்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்றும் அந்த ஒப்பந்தம் காரணமாக மலையாளிகளுக்கு மிகப் பெரிய மனக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அது நீக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுமானால் தமிழகம் கேரளாவிடம் விலை கொடுத்து தண்ணீர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் துணிந்து நச்சுக் கருத்துக்களை பரப்புகின்றனர்.
அதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கூட்டாட்சி நாட்டின் அடிப்படைக் கடமையைக் கூட உச்சநீதிமன்றம் நிறைவேற்றக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அணையின் பாதுகாப்பு குறித்து முடிவு தெரிவிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். தாங்கள் நதிநீர் நிபுணர் என்று கூறிக்கொண்டு அடிப்படை அரசியல் நெறிகளையே மறுக்கின்ற வன்மமான, அநீதியான அரசியல் கருத்துக்களை நடுநிலைமை என்ற பெயரில் அவர்களால் எழுதிப் பரப்ப முடிகிறது. அதனை அவர்களால் தமிழ்நாட்டில் துணிச்சலாக செய்ய முடிகிறது என்பதுதான் இங்கு ஆச்சரியம் கொள்ளத்தக்க ஒரு உண்மையாகும். இப்பிரச்சாரத்தின் உள்நோக்கமும் தமிழர் பகை நோக்கும் நமக்கு எளிதில் தெரியக்கூடிய ஒன்றுதான். ஆயினும், இக்கருத்துக்கள் மூலம் கேரள மாநிலம் ஏதோ தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது போன்றும் ஏகாதிபத்தியம் உருவாக்கிய ஓர் ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றது என்பது போன்றும் இந்தியாவின் பிற பகுதி மக்களிடம் ஒரு பொய்மையை உண்மை போன்று பரப்பி வருகின்றனர்.
எனவே இப்பிரச்சினை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய எல்லைப் பிரச்சினையாகும். அதனை ஆற்று நீரில் உரிமை கோரும் பிரச்சனையாக சுருக்குவது நமது உரிமைக்கு எதிரானதாகும். மலையாளிகளும் அவர்களது கேரள அரசம் இதனை தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். இடுக்கி மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கேரள அரசிற்கு 17.11.06 அன்று அனுப்பியுள்ள அறிக்கையில், தேவிகுளம் - பீர்மேடு வட்டங்களில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு ஓட்டுரிமை மற்றும் குடும்ப அட்டை வழங்குவதை கடினமாக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் அவ்விருவட்டங்களும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனை 26. 01. 2008 அன்று வெளிவந்துள்ள டெகல்கா பருவஏட்டின் கட்டுரை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சமீப ஆண்டுகளில் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள அரசம் அங்குள்ள கட்சிகளும் ஊடகங்களும் தமிழ் நாட்டிற்கு எதிரான இத்தகைய கடும் போக்கினை மேற்கொண்டிருப்பதற்கான பின்புலம் என்ன என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு முல்லைப்பெரியாறு ஆற்றில் நீர் பெறும் தமிழ்நாட்டின் உரிமையை மறுப்பதன் மூலம், எழக்கூடிய எல்லைப்பிரச்சினையை தவிர்த்துவிடலாம் என்பது கேரள தரப்பினால் மேற்கொள்ளப்படும் நுட்பமான தந்திர செயலாகும். அதனை புரிந்து கொண்டு உண்மையான எல்லைப்பிரச்சினையை தீர்க்க நாம் போராட வேண்டும். எல்லைப்பிரச்சினை தீர்வுதான் ஆற்று நீர் உரிமை பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தரும். வேறு வகையில் தமிழகத்திற்கு பயனிளக்கத்தக்க வேறு எந்த தற்காலிக தீர்வோ அல்லது நிரந்தரதீர்வோ இல்லையென்பதை தெளிவாக அறிதல் வேண்டும்.
இவ்வாறு உண்மையில் தேவிகுளம் - பீர்மேடு வட்டங்கள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படாமல் போனமையால் வஞ்சிக்கப்பட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களும் தமிழர்கள்தான் என்பதை இனியேனும் நாம் தெளிவாக உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அகில இந்திய கட்சிகள் அனைத்துமே இதில் தமிழர்களுக்கு எதிரான கட்சிகளாகும். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஒப்பந்தப்படி பெற உரிமையுள்ள 152 அடிநீர்த் தேக்கும் உரிமையை கூட வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற முதுகெலும்பற்ற கட்சி என்பதை தெளிவாக காட்டியுள்ளது. அக்கட்சியின் நிறுவனத்தலைவரான எம்.ஜி.ஆர். ஆட்சிப் பொறுப்பில் இருந்த 1979ம் ஆண்டுதான் அணை நீர்த்தேக்கப் பகுதியின் சுற்றுலா உரிமை, மீன் பிடித்தல் உரிமை, அணைப்பாதுகாப்புரிமை உள்ளிட்ட உரிமைகளை கேரள அரசிற்கு தமிழக அரசு தாரை வார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தி. மு. க. வின் தலைமை குடும்பத்தினரால் நடத்தப்படும் சன் தொலைக்காட்சி, கேரளாவில் 5-ற்கும் மேற்பட்ட மலையாள அலைவரிசைகள் நடத்தி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது. எனவே, அக்கட்சி இப்பிரச்சினையில் சடங்கிற்காக அறிக்கைகளை விடுவதுடன் நின்றுவிடுவது கவனிக்கத்தக்கது.
தேர்தல்கட்சிகள் அனைத்தும் இப்பிரச்சினை அடிப்படையில் எல்லைப்பிரச்சினை என்று அறிவித்து அதனை முதன்மைப்படுத்தத் தவறிவருகின்றன. ஆனால், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனை புரிந்து கொண்டு, இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இப்பிரச்சினை குறித்து பேசும் கட்சிகளிடம் அவற்றின் நிலைபாட்டை தெரிந்து கொள்வதற்கு எல்லைப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் நிலைபாடு என்ன? என்று கேட்டுப்பாருங்கள். அவை தமிழர் நலன்களை உண்மையில் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள்தானா என்பது இக்கேள்விக்கு அக்கட்சிகள் அளிக்கும் பதிலில் வெளிப்படும்!
தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை தமிழர் பகுதி என்றும் அதனை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்றும் உரிமைப் போராட்டம் மீண்டும் நடத்த வேண்டும். மறுக்க முடியாத சான்றுகள் மூலம் அவ்வுரிமை போராட்ட வழக்கின் ஒரு பகுதியினை திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சியினரும் அதன் தலைவர் திரு. மார்சல் நேசமணியும் நடத்திவிட்டுச்சென்றுள்ளனர். அவ்வழக்கின் அடுத்த பகுதியை இன்று தமிழர்கள் தொடர்ந்து நடத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அவ்வழக்கை நாம் நீதிமன்றத்தில் நடத்த முடியாது. தமிழர்களைத் திரட்டி நடத்த வேண்டிய உரிமைப் போராட்டத்தின் மூலம்தான் அவ்வழக்கினை நடத்தி வெற்றி பெற வேண்டியுள்ளது. அதற்கு, தமிழர்கள் அனைவரும் கடினமாக நீண்ட காலம் போராட வேண்டும் என்ற கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- அருளப்பா ( arunalawmadurai@gmail.com)

Saturday, 21 January 2012

தகவல்களை வழங்க அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்: சத்யானந்த மிஸ்ரா வேண்டுகோள்


First Published : 21 Jan 2012 02:51:39 AM IST

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் தலைமைத் தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா (இடமிருந்து மூன்றாவது).
சென்னை, ஜன.20: பொதுத் துறை நிறுவனங்கள் குறித்த தகவல்களை அந்தந்த நிறுவனங்களே வழங்க முன்வர வேண்டும் என்று தலைமைத் தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 சென்னையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான கல்விக் கழகம் சார்பில் "தகவல் பெறும் உரிமைச் சட்டம்- 2005' என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சத்யானந்த மிஸ்ரா பேசியது:
 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வெற்றி மற்றும் தோல்வி ஆகியவை தகவல் அதிகாரிகளைச் சார்ந்துள்ளன. இச்சட்டத்தின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை 10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் தொடர்பாகத்தான் அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
 இதில் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை எனக் கூறி விசாரணைக்காக 23 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. இச்சட்டத்தின் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. சரியான முறையில் செயல்படுவதாக ஒரு தரப்பினரும், சரியில்லை என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
 சட்டங்களை அறிவிப்பது எளிது, ஆனால் அதைச் செயல்படுத்துவதுதான் கடினம். கடந்த 2005-ம் ஆண்டு அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் அந்த நம்பிக்கையை இழக்கக்கூடாது. எனவே சட்டத்தை உரிய முறையில் செயல்படுத்தினால்தான் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாகும்.
 இச்சட்டத்தைக் கொண்டு வரும்போது அரசு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். எனவே மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்க தகவல் அதிகாரிக்கு மட்டுமின்றி நிர்வாகத்துக்கும் பொறுப்பு உள்ளது.
 எனவே நிறுவனங்கள் தொடர்பாக உள்ள தகவல்களை பாதுகாக்க வேண்டும். இதில் தகவல்களை வழங்க அதிகாரிகள் எந்தவிதத் தயக்கமும் காட்டத் தேவையில்லை. மேலும் தகவல்களை பாதுகாப்பது மட்டுமின்றி இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், பொதுத் துறை நிறுவனங்கள் அதைக் கடைபிடிப்பது இல்லை.
 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்கும்போது தங்களது கருத்துகளை வழங்காமல், காகிதத்தில் உள்ள தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்பதுதான் சட்டம்.
எனவே அரசு ஊழியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும்.
 இச்சட்டத்தில், எந்தவித மாற்றத்தையும் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. மேலும் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்ற கால அவகாசத்தையும் நீடிக்கத் தேவையில்லை. தற்போது மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதை மேம்படுத்த மேலும் சில காலம் ஆகும்.
 சட்டத்தின் கீழ் இ-மெயில் மூலமாக தகவல் பெறும் வசதியை சில அமைப்புகள் ஏற்படுத்தி உள்ளன. மேலும் அனைத்து துறைகளில் விரைவில், இந்த முறை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள ஆணையாளர்கள் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று சத்யானந்த கூறினார்.
 இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குநர் பி.சுரேந்திர மோகன், மனித ஆற்றல் துறை இயக்குநர் எஸ்.கே.ஆச்சாரியா, பொதுத்துறை நிறுவனங்களுக்கான கல்விக் கழக இயக்குநர் ராம்குமார் மிஸ்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Hindutva’s Ugly Face Again Unmasked


By Syed Ali Mujtaba
11 January, 2012

Thanks IDEAS AVANAM  and Countercurrents.org

The news of Pakistani flag being hoisted by some miscreants in Sindhagi town, some 60 kilometer from Bijapur in Karnataka, was shocking. The flag was hoisted during midnight celebration of the New Year 2012 on the flag post of the government office premises.
The incident led to angry protests by Hindu organizations that called for strikes in a number of towns around Bijapur. Hundreds of youth gathered at the spot, set tyres on fire, blocked the road and the stoned a Muslim prayer hall.
One hear Pakistani flag being hoisted in Kashmir and understands the reason as the political undertones there, but such a thing happening in a remote place in a south India is something unreasonable.
Why such a thing is happening nearly 64 years after the Partition of India and the creation of Pakistan is something unimaginable. Definitely, there was more to the story then just what was reported in the media.
The mystery was unraveled when six members of a right-wing Hindu group were arrested for such dastardly act. Those arrested belong to the Sri Ram Sena, a fringe Hindu group that has a history of creating disharmony in the society.
This was confirmed by the police that miscreants who hoisted the Pakistani flag did so with the prime motive of breaching the communal peace in an area where there was a sizable Muslim presence.
Its not the first time the needle of suspicion has taken a 180 degree turn. The first was the Samjutha Express blast in 2007 which many Pakistani nationals was killed.
The act was blamed on Indian Muslim terrorist organization but investigation later reveled that Hindu terrorist group were behind the train blast. The poor Muslims of India were vilified for the act of which they had no clue.
The Mecca Masjid blast in 2007 has similar story. After the initial blame game and the arrests of Muslim suspects the investigation turned around and it was Hindutva forces that were believed to be behind the blast.
The 2008 Malegoan blast at a Muslim graveyard is another episode in the chain events that again blamed on Indian Muslim organization. Later, it was found out that it was the handiwork of some Hindu terrorist organization.
In this backdrop when the news report of the Pakistani flag is being hoisted in Sindhagi town, it evoked suspicious response among the Muslim circles. The news report could not stand to the test of reasons. Why do south Indian Muslims would do such an act was a common question.

Speedy probe into the case that led to the arrest of six college students cleared the dust over this mystery. It also defused the communal situation that had all the ingredients of developing into a communal riot.
Investigation later revealed that the Pakistan flag was made at the home of one of the accused in this case and it was done so by the activists of Sri Ram Sene.
Sri Ram Sene, is a break away from the Bajrang Dal, an affiliate of the long-standing Hindu nationalist organization, the Rashtriya Swayamsevak Sangh (RSS).
In 2009, Sri Ram Sene had claimed responsibility for attacking women outside a pub in the coastal town of Mangalore, saying that allowing females in pubs was against Indian culture.
A few years ago, Police arrested members of Sri Ram Sene for the desecration of a mosque in Mysore where a carcass of a pig was thrown near the prayer hall. The act triggered a major riot between Hindus and Muslims there.
The founder of the Sri Ram Sene Pramod Muttalik, who always likes to remain in the center of the controversy, has claimed that the arrested youths in the case of hoisting Pakistani flag were not members of his outfit. He claims that Sene does not have any students’ wing in the state points that the arrested person belonged to the Sangh Parivar.
Irrespective of the fact, whether it’s Sri Ram Sene or Shiv Sena or Bajrang Dal, that are behind such acts, the fact remains that these outfits have been guilty of creating communal divide in the country.

The political protection given to such outfits has emboldened them to commit such heinous crimes time and again.
The irony is the blame is put on the poor Muslims and when it comes to profiling they most bear the burnt of being vilified. There are stereotype that’s being dished out, such as: all Muslims are not terrorists but all terrorist are Muslims!
The likes of Sri Ram Sena or Shiv Sena or Bajrang Dal have a national immunity in such profiling because they have the benefit of doubt and they get away under the garb of patriotism.
A Hindu can never be a terrorist is an often hared cliché in India. The statement is rationalized by giving some hackneyed explanations. Hindus are vegetarians, they worship several gods, they are more god fearing etc, and other such theories that has become banal now.
Those who call Muslims ‘Babar ki Aulad’ are in fact sham creatures. They do so because they have deep rooted animosity against the Muslim that has come through the systematic act of brain washing. The anger, jealousy and hatred prompt them to do some mischievous acts. They do so in order to create a communal wedge in the society to keep Muslims on the back-foot all the time.
They have few aces up their sleeves and hoisting of the Pakistani flag is one such ace. The others being AMU minority character, Urdu language, Kashmir, Pakistan, Haj subsidy, cow slaughter, etc are to name a few. These issues are propped up to create acrimony in the society especially when the forces of communal harmony gains accent.
Apart from the deep rooted hatred against the Muslims, there is always an element of politics into such incidents. Hatching such conspiracy is duly driven with the greed to garner Hindu votes by making them treat the Muslim community with suspicion.
The above incident proves beyond doubt that Hindutva characters are prepared to do anything for cornering power. It’s apparent that such fissures are being done to ignite frictions between Hindus and Muslims to garner Hindu vote bank. The most ironical part is that such characters are not even ashamed of stooping so low to deceive people.
How long Indians are going to be fooled by such bandicoots is something that is hard to understand. These bunch of murder gangs are out there on a mission to destroy this country. Its only of they are dealt with the harshest punishment only then some sense can be enthused in our democracy.
Syed Ali Mujtaba is a journalist based in Chennai. He can be contacted at syedalimujtaba@yahoo.com

Friday, 13 January 2012

யாருக்கு ஊட்டம்?





இந்தியாவில் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 42 விழுக்காட்டினர், ஊட்டச் சத்துக் குறைபாடுகளுடன் எடை குறைவாக இருப்பதாகவும், இவர்களில் 59 விழுக்காட்டினர் உடல்வளர்ச்சிக் குன்றியவர்களாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்ட பிரதமர் மன்மோகன் சிங் இதை ""தேசிய அவமானம்'' என்றே வர்ணித்துள்ளார்.

குழந்தைகளின் சத்துக் குறைபாடுகள் 2004-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பைக் காட்டிலும் தற்போது குறைந்துள்ளது என்று கூறிக்கொள்ள முடியும் என்றாலும், இந்த சமாளிப்புகள் எதையும் செய்யாமல், தேசிய அவமானம் என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருப்பதுடன், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும்படியாகத் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

1975-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தை (ஐ.சி.டி.எஸ்) திருத்தியமைக்கவும், குறிப்பிட்ட இலக்கை மையப்படுத்தி கவனமாகச் செயல்படவும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று உடனடியாகக் கோரிக்கை வைத்திருக்கிறார் மகளிர் மற்றும் குழந்தைகள் துறை அமைச்சர் கிருஷ்ண தீரத்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் இந்தியாவில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் முதலாக 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் வரை அவர்களது உடல் நலனில் கவனம் செலுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 3.40 கோடி. கர்ப்பிணித் தாய்மார்கள் 70 லட்சம் பேர். இவர்களை மட்டுமே இலக்காகக் கொண்டு, இந்தத் திட்டத்தின் கீழ் சத்துணவு, சத்துமாவு, சத்து மாத்திரை, பால் பவுடர், தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டுசேர்க்க முடியுமானால், இந்தியாவில் அனைத்து குழந்தைகளையும் அவர்களது வயதுக்கேற்ற எடையும் வளர்ச்சியும் உள்ளவர்களாக மாற்றிவிடமுடியும்.

இத்திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு மிக மிக சிறப்பாக இருக்கிறது என்பதற்காக நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இந்தப் பெருமை மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரைத்தான் சேரும்.

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் அறிமுகம் செய்தார். இதனால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்தது. ஜாதீய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமூக நல்லிணக்கம் தமிழகத்தில் ஏற்பட்டதற்கு அதிகரித்த கல்விப் பயனும், மதிய உணவுத் திட்டமும்தான் காரணமே தவிர எந்தவொரு அரசியல் இயக்கமும் காரணமல்ல என்பதுதான் உண்மை.

5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பால்வாடி அன்றைய நாளில் இருந்த போதிலும், அவற்றின் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் பால் வழங்க முடியவில்லை. குறிப்பாக மலைப்பகுதிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிரமம் இருந்து வந்தது. எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்தபோது, அனைத்துக் குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து, சத்துணவு மையங்களை எல்லா இடங்களுக்கும் விரிவுபடுத்தினார். தமிழகத்தில் ஊட்டச்சத்துக் குறைவு கணிசமாகக் குறைந்ததற்கு சத்துணவுத் திட்டம்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பே பாராட்டுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் சத்துணவு, மழலையர் கல்வி, சுகாதாரம் குறித்து தாய் மற்றும் குழந்தைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய மூன்றையும் குடும்ப நலத் துறையும், நோய்த்தடுப்பூசி, உடல் பரிசோதனை, மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தல் ஆகியவற்றை பொதுச்சுகாதாரத் துறையும் கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சத்துணவு மையம், அங்கன்வாடி ஆகியவற்றின் மூலமாக 66.41 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முறையாகச் செய்யப்பட்டால், தமிழகத்தில் குழந்தைகள் நலன் மேலும் சிறப்படையும் என்பது நிச்சயம்.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குச் சத்துணவு கிடைக்காமல் இருந்தால் அது பெற்றோரின் அலட்சியமாக இருக்குமே தவிர, அரசின் அலட்சியம் அல்ல. இதற்காக தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கி, அதனை இன்றுவரை முன்னெடுத்துச் சென்ற முதல்வர்கள் மு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கும் இந்தப் பெருமையில் பங்கு உண்டு.

பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வடஇந்திய மாநிலங்கள்தான் இத்திட்டத்தில் மோசமாக செயல்பட்டுள்ளன என்பது அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் தெரியவருகிறது. இந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவோ அல்லது வேறு திட்டங்களுக்குத் திசை திருப்பப்பட்டு இருக்கவோ வாய்ப்புகள் உள்ளன. 2005-06 நிதியாண்டுக்குப் பிறகுதான், இத்திட்டத்துக்கு மாநில அரசின் பங்கேற்புத் தொகை 50 விழுக்காடு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையிலும் முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொண்டது. நிதியை முறையாகப் பயன்படுத்தினார்களா என்பதை இத்தனை காலமாக கண்காணிக்காமல் தணிக்கை செய்யாமல் இருந்தது யாருடைய தவறு?

இந்தியாவில் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம், வறுமை என்பதைக் காட்டிலும், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் பலன் கிராமங்கள் வரை சென்று சேரவில்லை என்பதைத்தான் இவை வெளிப்படுத்துகின்றன. இத்திட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனாலும், நிதி செலவிடப்படும் விதம் குறித்து மத்திய அரசு தணிக்கை செய்து, அதிகாரிகள் தவறு செய்திருந்தால் தண்டிக்க வேண்டும். அரசியல்வாதிகள் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தாதவரை, குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவுடன் இருப்பார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊட்டத்துடன் இருப்பார்கள்.

உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள்!!


சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.

அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.

இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

நன்றி cnn

உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்





தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.

காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.

விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.

தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும்.

வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.

வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.


நன்றி cnn

Monday, 9 January 2012

பனிக்காலத்தில் நோயில்லாதிருக்க உணவும் வாழ்வும்


‘மாதங்களில் அவள் மார்கழிஎன்று கவிஞர் கொஞ்சும் மாதம் மார்கழி. முன்பனிக்காலம் என்று பழம் இலக்கியங்கள் வகைப்படுத்தியுள்ளது மார்கழியையும் தையையும் தான்.  “கொண்டல் காற்று வீசும்; ஆந்தை மகிழும்; செந்நெல் விளையும்; செங்கரும்பு முதிரும்;என்று நம் முன்னோர் முன்பனிக்காலத்தைப் பற்றி பாடியது, சாட்டிலைட் இல்லாமல், அணுமின் அவசியப்படாமல், முழுமையாய்த் தம் நுண்ணறிவின் ஆழமான பார்வையாலும் அலசலாலும் தான்.

சூரியன் கொஞ்சம் தள்ளிச் சுற்றுகிறது..கூடுதல் குளிர் இருக்கும். உடலை வெம்மையாய் வைத்திருப்பதன் மூலம் முன்பனிக்காலத்து நோய்க் கூட்டத்தை வராது தடுக்கலாம் என நம் முன்னோர்கள் சித்த மருத்துவ இலக்கியங்களில் எடுத்துச் சொன்னது, இக்கால நவீன  epidemiologists சொல்லும் கருத்துக்கு சளைத்தவை அல்ல. இந்தப் பருவத்தில், இந்த வகையான நிலத்தில் வாழும் மக்கள் இவ்வகையான உணவைச் சப்பிட்டு, இவ்வகையான வாழ்வியலைப் பின்பற்றினால் நோயின்றி வாழலாம் என அவர்கள் சொன்னது 2000 வருடங்களுக்கு முன்பு.

 “நோ? மம்மி! - நியூசிலாந்து சீஸ் தடவிய இட்டாலியன் பிட்சாவும், இங்கலீஷ் பிரட்டும் தான் ஹெல்த்தி..ஓட்ஸ் கஞ்சி வேண்டுமானால் சேர்த்துக்கிறேன், என மேற்கத்திய  ‘நொர்நாட்டியம் பிடிக்கும் நம்ம ஊர் மெத்தப் படித்த மேதாவிகள், இதனை ஒதுக்கியதில் மருந்துக் கம்பெனியும் அவர்தம் அடிப்பொடி ஆழ்வார்களாய் மருத்துவர்களும் செழிக்கிறார்கள். கொழிக்கிறார்கள்.

பனிக்கு கம்பளி ஸ்வொட்டர் போடச் சொன்னது முதல், கோதுமை முதலான சூட்டைத் தரும் உணவைச் சாப்பிடச் சொன்னது வரை பனிக்கால பிரிஸ்கிரிப்ஷன் அன்றே உண்டு. மாலை நேரத்தில்தான் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இளங்காலைக் குளிர் தவிர்க்கப்பட வேண்டும். தினசரி உடலில் வியர்வை கசியும்படி உடலுழைப்பாய் ஒரு செயலை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதும்  நம் முன்னோர் மார்கழியில் செய்யச் சொன்ன நலவாழ்வுச் சூத்திரங்கள்.

முன்பனிக்கால மார்கழியில் இரைப்பு எனும் வீசிங்(ஆஸ்துமா), மூக்கடைப்பு, தும்மல், மூட்டுவலி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தலைகாட்டும். தோல்வறட்சியால் அப்பா ஒருவழியா ஒழிஞ்சிடுச்சு என நினைத்திருந்த சோரியாஸிஸ், கரப்பான்(எக்ஸிமா).. மீண்டும் தலைக்காட்டும்.

 பனிக்காலத்தில் ஏதும் நல்லதில்லையா? என்று கேட்டால், மார்கழி காதல் செய்யும் நேரம்.(அது தான் கவிஞர்கள் மார்கழியை மறப்பதில்லை போலும்!).இனிப்பு சாப்பிட உகந்த நேரம்( ஹலோ! ட்யாபடிக் சித்தப்பா..வீசிங் வரும் தங்கச்சி.. நீங்க உங்கள் மொழியில் விழியில் மட்டும் இனிப்பு வச்சுக்கோங்க..சாப்பிடக்  கூடாது)

பலமுறை மிளகைப் பற்றி எழுதியதில் ஒருமுறை, நண்பர் ஒருவர் “சார்! மிளகுத் தோட்டம் வச்சிருக்கார்னு நினைக்கிறேன்: எப்பப் பார்த்தாலும் மிளகைச் சாப்பிடச் சொல்லி அடம்பிடிக்கிறார்”, என்று. உண்மையில் ஆம்லெட், வெண்பொங்கலில் மிளகைப் பார்க்கிறது தவிர மிளகு எஸ்டேட் பக்கம் டூருக்குக் கூட சென்றதில்லை. ஆனால் மிளகு குறித்து படிக்க படிக்க அதன் ஆய்வு முடிவுகள் எல்லாவர்றையும் பார்க்கபார்க்க மிளகு மருந்திலும் சரி, உணவிலும் சரி  ‘பாக்ஸ் ஆஃபிஸ் கெட்டி!  ‘மிளகுக்கு இப்போது இத்தனை பில்ட் அப் கொடுப்பது கூட மார்கழி மாதத்தில் மிளகை நீங்கள் மறக்கவே கூடாது என்பதால்தான். குளிர் காலத்தில் உடலுக்கு அதிக வெம்மை தேவைப்படும். அதைத் தரும் மிளகு பனிகால சளிக்கும் முதல் மருந்து.ஆஸ்துமா நோயாளிகளுக்கு நவீன மருந்தில் முதல் தேர்வாக்க் கொடுக்கப்படுவது தியோஃபிலீன்; டெரிஃபிலீன் மருந்துகள்..அம்மருந்தின் வேகத்தை அதிகப்படுத்தவும் உடலில் அதன் செயல் திறனை ஊக்குவிக்கவும் மிளகு பெரும் பயன் தருகிறது என்கிறது தற்போதைய ஆய்வுகள். 

 நிறைய சித்த மருந்துகளில் மிளகு சேர்க்கப்படுவது கூட அதன் தனிப்பயனுடன், உடன் சேர்க்கப்படும், பிற மூலிகைகளின் செயல் திறனைக் கூட்டத்தானோ என்ற எண்ணமும் இப்போது மேலோங்குகிறது. என்வே மார்கழிப் பொங்கல் மட்டுமல்ல, ஆம்லெட், அடை- அவையல் என எதில் வேண்டுமானாலும் மிளகை கூடுதல் போடுங்கள்.
பீர்க்கு, பூசணி, சுரை போன்ற நீர்க்காய்கறி அதிகம் வேண்டாம். உளூந்து குளிர்ச்சிதான் என்றாலும், பனிக்காலத்தில் உடல் உறுதி தரப்பயன்படும் என்கிறது தமிழ் மருத்துவம். மற்ற நேரத்தில் அதிகம் நல்லதில்லாத, இனிப்பு. புளிப்பு, உவர்ப்பு சுவை உள்ள உணவுகள் பனிக்காலத்தில் நல்லது.. மார்கழியில் அதிகாலை பசி கிள்ளும். அதனால் தான் என்னவோ மார்கழிக் காலையில் இறைவழிபாடும் அதிகாலை மிளகுப்பொங்கலும் வாழ்வியலாய்ச் சொல்லப்பட்டது போலும். பனைவெல்லம் பனங்கற்கண்டு சேர்த்த இனிப்பு பண்டங்களும், உப்பேறி (நாகர்கோயில் மக்களைக் கேளுங்கள்..அவர்கள் ஊர் ஸ்பெஷாலிடி இனிப்பு அது), வெல்ல பனியாரம், அதிரசம் போன்றவையும் மார்கழி மாச உடலுறுதிப்படுத்தும் இனிப்புகள்.(அளவோடு சாப்பிட்டால்)

பனிக்காலத்தில் தைலப்பூச்சை ஒரு முக்கிய வழக்கமாக சித்த மருத்துவ நூற்கள் அறிவுறுத்துகின்றன. உடற்சூட்டைத் தக்க வைக்கவும், மூட்டு நரம்புகள் வலுவை தக்க வைக்கவும் இப்பூச்சு உதவிடும். குறிப்பாக எலும்புத் தேய்வினால், அல்லது ருமட்டாய்டு எனும் இரத்தத்தில் ஆர்.ஏ. பொருள் இருப்பதால் வரும் மூட்டுவலிகள், இப்பனிக்காலத்தில் அதிகம் வலி தரும். மூலிகைத் தைல எண்ணெய்களை அருகிலுள்ள சித்தமருத்துவர்களை அணுகிப் பெற்று, அத்தைலத்தை இளஞ்சூடாக்கி(அதிக சூடாகிவிட்டால் எண்ணெய்க் கொப்புளம் ஏற்பட்டு விடும்), நன்கு அழுத்த மூட்டுகளில் தேய்க்க வேண்டும்.முன்பெல்லாம்,  ‘தைலம் தேய்ப்பதால் என்ன வந்துவிடபோகிறது?’, என சண்டைக்கு வந்த நவீன மருத்துவ நண்பர்கள், தற்போது ஆய்வு செய்து, எண்ணெய் தேய்ப்பு,  lymphatic drainage- ஐ விரைவுபடுத்திகிறது. Macropahage பணி வேகமாக நடைபெற்று வீக்க குறைப்பு (REDUCTION OF INFLAMMATION) நிகழ்கிறது, என பன்னாட்டு உயர் மருத்துவ ஏடுகளில் எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார்கள்.

சோரியாஸிஸ், கரப்பான் போன்ற நோயுள்ளோர் நோய் நீங்கி இருந்தாலும் உடலுக்கு மருத்துவர் சொல்லும் தைலத்தை தோலில் தடவி வருவது மிக அவசியம். அது நோய் மீண்டும் தலைகாட்டாமல் இருக்க உதவிடும். மார்கழியில் குழந்தைகளுக்கு மறக்காமல் இரவில் கற்பூராதி தைலம்( தேங்காய் எண்ணையை சூடாக்கி கற்பூரம் கலந்து வைப்பது-கடைகளிலும் கிடைக்கும்) மார்பில் தேய்ப்பது சளி பிடிக்காமலிருக்க உதவும்.

 இரவில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்த பால் சேர்ப்பது, மதியம் தூதுவளை ரசம் சாப்பிடுவது, மாலையில் அவ்வப்போது கொள்ளு சுண்டல் சாப்பிடுவது உடலை சூடாக வைத்திருந்து நோய் விரட்ட உதவும். குளிக்க, குடிக்க வெந்நீர் பயன்படுத்துவது,  நொச்சி தழை போட்டு ஆவிபிடிப்பது போன்ற வாழ்வியல் வழக்கங்களையும் வீட்டில் செய்வது மார்கழியில் நல்லது.

மணமூட்டும் உணவே மருந்து!

யுந்தே.கேமரூன் நாட்டின் தலைநகரம்.மத்திய ஆப்பிரிக்கவின் மேற்கு ஓரத்தில் உள்ள இயற்கை வளம் மிக்க நாடு.உலக பாரம்பரிய மருத்துவ மாநாட்டிற்காக்க் கடந்த வாரத்தில் அங்கு செல்ல நேர்ந்தது. நம் ஊர் ஏலகிரி மலை அளவில் உள்ள மலை நகரம். ஆனால், அது அந்நாட்டின் தலைநகரம். ஒரு பிரபல பிரஞ்சு ஓட்டலில் தங்கி இருந்த எங்களில் இரண்டே பேர் மட்டுமே சைவ உணவுப் பிரியர்கள். நீந்திச் செல்வதில் கப்பலும், பறப்பதில் விமானம் தவிர அனைத்து ஜீவராசிகளும் விருந்தாய்ப் படைக்கப்பட்டிருந்தன. சரி பரவாயில்லை..பசிக்குக் கொஞ்சம் கோழி,மீனாவது சாப்பிடலாம் என்றால்,அத்தனையும் உப்பு புளி காரம் மசாலா இல்லாமல் பத்தியமாய் வேகவைத்து இருந்தது. அசைவம் சாப்பிடும் ஆசையில் இருந்த இன்னும் இரு இந்தியர்கள் தட்டை ஏந்திக் கொண்டு பரிதாபமாய் ”வாயில் வைக்க விளங்கலையே, டாக்டர்,”என்றனர்.
நமக்குப் பரிச்சயமானது எது அங்கில்லை என்று யோசித்த போது, ” அறு சுவை இல்லை;மசாலா எனும் மணப்பொருள் உணவில் இரண்டறக் கலக்கவில்லை” என்பது புரிந்தது. உலகில் மசாலாக்களை உணவாய்ச் சேர்க்கும் பழக்கம் இந்தியாவிலும் சீனாவிலும் தான் அதிகம் உண்டு.மற்றவர் மணமூட்டியாக,தேனீர் கலவையாக மட்டுமே இந்த மசாலாக்களை அறிந்திருந்தனர். தினசரி உணவில் நாம் எத்தனை நறுமணப் பொருட்களை,மசாலாப் பொருட்களை சேர்க்கிறோம் தெரியுமா? பள்ளிக் காலத்தில் முனங்கிக் கொண்டே நான்கைந்து அலுமினிய தூக்கு வாளியை சைக்கிளில் போட்டுக் கொண்டு சாம்பார் பொடி,ரசப்பொடி,புளிக்குழம்பு பொடி திரித்து வர தூரத்து ரைஸ்மில்லுக்கு போய் தும்மிக்கொண்டே திரும்பி வருவது இன்னும் மறக்கமுடியவில்லை.”வாரம் வாரம் திரிக்கப் போகணுமா?ஒரு வருசத்துக்கு மொத்தமா திரிக்க வேண்டியது தானே என தகராறு பண்ணியதும்,” அதற்கு அம்மா,”மொத்தமா திரிச்சா மணம் மட்டுமல்ல,கூடவே நல்ல பலனும் போய்விடும் என்று volatile ஆக உள்ள phytomolicules ஐப் பற்றி அழகாய்ச் சொன்னதும் நினைவில் உள்ளது.




மஞ்சள்,மிளகு,மிளகாய் வற்றல், கொத்துமல்லி,இலவங்கம்,இலவங்கபட்டை,
ஏலம்,அன்னாசிப்பூ,கிராம்பு,வெந்தயம்,சீரகம், சோம்பு,பூண்டு,பெருங்காயம்,என நாம் அன்றாடம் சேர்க்கும் பட்டியலில் உள்ள அனைத்துமே மணமூட்டிகள் மட்டுமல்ல.மூலிகைகளும் கூட. கொஞ்சம் அதன் மணத்தையும் மகத்துவத்தையும் முகரலாமா?
ஒவ்வொரு முறை உணவு தயாரித்து முடித்த பின்பு உணவைத் தாளித்து எடுக்கின்றோம். இந்த தாளிசம் செய்யும் முறைக்குப் பின்னால் ஒரு மருத்துவ பிண்ண்னியே உள்ளதென்பது உங்களுக்கு தெரியுமா? வெளினாட்டு உணவுக் கலாச்சாரத்தில் தாளிசம் கிடையாது. டிரெஸ்ஸிங் எனும் அலங்காரம் மட்டும் தான் உண்டு.
ஏன் உணவை தாளிக்கின்றோம்?.உணவு தயாரிக்கும் சமயம், சுவை ஒன்றோடு ஒன்று கலக்கும் போது, அதன் மூலப்பொருட்களும் கலக்கும்.அப்போது ஏற்படும் மாறுதல்களில்,நம் உடலைப் பாதிக்கும் எந்த ஒரு சிறு நிகழ்வும் ஏற்படாது இருக்க, திரிதோட சமப் பொருட்கள் (வாதம், பித்தம், கபம் எனும் திரிதோடத்தையும் சமமாய் நன்னிலையில் வைத்திருக்கும் பொருள் ) எனும் எட்டு வகை கார நறுமணப்பொருட்களை கடைசியில் சேர்க்கும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து இருந்தனர். இப்போது தாளித்து எடுக்கும் முறைக்கும் அப்போதைய தாளிசத்திற்கும் நிறையவே மாறுதல் உண்டு. இப்போது உள்ள கடுகு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. மாறாக,மிளகு,ஏலம்,மஞ்சள்,பெருங்காயம்,பூண்டு,சீரகம்,சுக்கு,வெந்தயம் பயன்படுத்தபட்டன. இந்த திரிதோட சமப் பொருட்கள், உணவு சமைக்கப் பட்ட பின்பு சேர்க்கப்படும் போது, சுவையினைப் பெருக்குவதுடன்,சீரணத்தயும் சீராக்கி, உணவால் எவ்வித கேடும் விளையாமல் உடலைப் பேணும். அது எப்படி என்று இனி பார்ப்போமா?
இனிப்பு உணவு எதைச்செய்தாலும் கொஞ்சம் ஏலம் சேர்க்க வேண்டும்.இனிப்பால் அசீரணம் வராதிருக்கவும்,அதன் மூலம் சளி சேராதிருக்கவும் ஏலம் உதவும். இனிப்பு உடலில் வேகமாக சேராது இருக்கவும் ஏலத்தின் அரிசி உதவிடும்.

புலால் உணவு எது சமைத்தாலும் பூண்டு, மிளகு, சுக்கு அவசியம் அதில் இடம்பெற வேண்டும். மிளகு ஒரு நச்சு நீக்கி. உடலில் அலர்ஜி ஏற்படாது இருக்கவும்,மூக்கு சைனஸ் பகுதியில் சளி சேராமல் இருக்கவும் மிளகு பாதுகாக்கும். ஆஸ்துமா நோயினருக்கு, மிளகு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.மிளகில் உள்ள piperine எனும் alkaloid, ஒரு மிகச் சிறந்த immune modulator என்று இன்றைய அறிவியல் உணர்ந்து உள்ளது. உங்கள் வீட்டில் இனி யாராவது உணவில் மிளகைத் தட்டில் பொறுக்கி ஓரம் வைத்தால், ‘ணங்’ என்று செல்லமாய் ஒரு கொட்டு கொட்டி,மிளகின் மகத்துவத்தை புரிய வையுங்கள்.
பூண்டு,இதயம் காக்கும் இனிய நண்பன். நெடுங்காலமாக, இதனை நாம் பயன்படுத்தி வந்தாலும், வெள்ளைமுடிக்காரன் விசாரித்துச் சொன்ன பின்பு தான் இதனை கொஞ்சம் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். மடி, ஆசாரம் என பூண்டு, வெங்காயத்தினை ஒதுக்குவோருக்கு ஒரு வேண்டுகோள்! உங்கள் இரத்தக்கொழுப்பை சீராக வைத்து, இதயம் என்றும் பழுதின்றி இயங்க இவ்விரண்டும் கண்டிப்பாய் உணவில் இடம்பெற வேண்டும். அதிலும் குறிப்பாய் சிறு பூண்டு,சிறு வெங்காயம் தான் உங்கள் முதல் தேர்வாக இருக்க வேண்டும்.பல்லாரி வெங்காயத்தை விட சிறு வெங்காயம் 2600 மடங்கு அதிகம் நற்கூறுகள் கொண்டது என இன்றைய விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர். மலைப்பூண்டைக் காட்டிலும் சிறு பூண்டும் அதன் சத்துக்களில் சிறந்தது. Allicin எனும் அதன் சத்து மாரடைப்பைத் தடுப்பதுடன் ஒரு சிறந்த எதிர் நுண்ணியிரியும் கூட. என்ன கொஞ்சம் மெனக்கிட வேண்டும். காப்பாற்றப்படுவது உங்கள் இதயம் அல்லவா?
’சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை’, என்று ஒரு வட்டார வழக்கு மொழி ஒன்று உண்டு. அந்த அளவிற்கு சுக்கு ஒரு தலையாய் மருந்து. புலால் உணவு எளிதில் சீரணிக்க சுக்கு உதவிடுவதுடன், உடலில் பித்தம் சேர்ந்து, மைக்ரேன் தலைவலி வராதிருக்க சுக்கு உதவும்.மைக்ரேன் தலைவலியில் அவதிப்படுவோர் தங்கள் ஒவ்வொரு உணவிலும் சுக்கை சிறு அளிவில் சேர்ப்பது சிறப்பு.
வாழைக்காய்ப் பொரியல், உருளை பிரட்டல், சுண்டல் வகையராக்கள் செய்யப் போகிறீர்களா? முடிவில் பெருங்காயப் பொடி சேர்க்க மறக்க வேண்டாம். பெருங்காயம் வெறும் மணமூட்டி மட்டுமல்ல. வாய்வு உடலில் சேராதிருக்கவும், அசீரணம் ஆகிவிடாமல் இருக்கவும் உதவுவதுடன் குடற்புண்களையும் அகற்றிட உதவும்.
சீரகம் அகத்தைச்(இரைப்பையை) சீர் செய்வதால் அதற்குக் கிடைத்த பெயர். எந்த மந்தம் தரும் எண்ணெய்ப் பதார்த்தங்களையும் செய்து முடிக்கையில் பொன்வறுவலாய் வறுத்த சீரகத்தைச் சேர்க்க மறக்க்க் கூடாது. சீரகமும் இலவங்கப்பட்டையும் குடற்புண்களைத் தரும் ’ஹெலிகோபேக்டர் பைலோரை’ எனும் நுண்ணியிரியினைக் குடலில் வளர விடாமல் செய்யவும் உதவிடும். அசீரணம் உள்ளவர்கள், நம் அண்டை மாநிலத்து நண்பர்களைப்போல் சீரகத்தண்ணீரை அவ்வப்போது சேர்க்க வேண்டும். சீரகம் இரத்தக் கொதிப்பு நோயாளிகளுக்கும் நல்லது.
அடுத்து வெந்தயம். சைவ உணவினருக்கு நல்ல காய்கறிகள், கனிகள் சாப்பிடத் தவறினால், உடலுக்கு தேவையான நார்சத்து கிடைப்பதில்லை.ஒரு நாளைக்கு கிட்ட்தட்ட 22கிராம் நார்பொருள் நமக்கு தேவை. வெந்தயம் சைவ உணவுகளில் அதிக நார்சத்து கொண்ட பொருள். குறிப்பாக, கரையும் நார்ப் பொருள் தான் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையைத் தரும். கரையாத நார்ப்பொருள் மலச்சிக்கலை நீக்குவதுடன், இரத்தசர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். வெந்தயம் இந்த இரண்டு வகை நார்ப்பொருளையும் அதிக அளவில் கொண்டது. சாம்பார், இட்லி, சப்பாத்தி, என அத்தனை உணவிலும் வெந்தயம் சேர்ப்பது புத்திசாலித்தனம். நீரிழிவு, இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு ஆகிய முக்கிய மூன்று எதிரிகளுக்கும் வெந்தயம் ஒரு மருந்தாகும் உணவான functional food.
நறுமணமூட்டும் உணவுகளிலேயே தலையானது மஞ்சள். நம் உணவுகளில் அன்றாடம் இதை ஏதோ ஒருவிதத்தில் சேர்ப்பதினால் தான்,இன்னும் சுகாதாரச் சூழல் அதிகம் இல்லை என்றாலும், பல நோய்கள் வராது இருக்கின்றது. மஞ்சள் ஒரு புழுக்கொல்லி.எதிர் நுண்ணியிரி. Natural antibiotic! அதைக்காட்டிலும் புற்று நோய்க்கான மருந்து. கார ருசிக்காக அதிகம் சேர்க்கப்படும் மிளகாய் வற்றல் சேரும் உணவில் எல்லாம், மஞ்சள் சேர்க்கப்படுவதினைப் பார்த்திருப்பீர்கள். மிளகாய் வற்றலின் carcinogenic இயல்பை,மஞ்சள் மாற்றிவிடும். ஆதலால் தான் அந்தக் காம்பினேஷன் எங்கும் உள்ளது. ஒவ்வொரு காய்கறிகளிலும்,கூட்டிலும் சமைத்தபின் கொஞ்சம் மிளகுத் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு சேர்க்க சேர்க்க உங்கள் மருத்துவச் செலவு கண்டிப்பாய்க் குறையும்.
நறுமணம் ஊட்டும் இந்த காரப் பொருட்கள், நம் பாரம்பரியத்தின் அடையாளங்கள். நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற நலவாழ்வுச் சூத்திரங்கள். தாளிப்பதற்கும் டிரெஸ்ஸிங் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் தாளிப்பதில் கூடுதலாய்க் கிடைக்கும் அதன் நலப் பண்புகள் தான். அதற்காக, உணவை அலங்கரிப்பது தவறல்ல. கூடுதலாய் அக்கரையுடன் இந்த spices –ற்கு இடம் அளிக்க மறந்து விடல் வேண்டாம்.வீட்டில் ஆராக்கிய மணம் நிலைக்க இந்த மணமூட்டிகள் அஞ்சரைப் பெட்டியில் அவசியம் வேண்டும்.