Sunday 5 June 2011

காங்கிரஸ் இப்படித்தான் அழியுமா?


  ழல் முறை கேடுகள் லஞ்ச லாவண்ய பேயாட்டம் என்பது எல்லாம் நமது நாட்டுக்கு ஒன்றும் புதியது அல்ல

சாணக்கியன் துவங்கி மன்மோகன் சிங் காலம் வரையில் இவைகள் புதிய பரிணாமம் பெற்று வளர்ந்து வருகிறது

ஒரு காலத்தில் பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பது பாவம் என்றும் அப்படி செய்பவர்கள் கேவலம் ஆன பிறவிகள் என்றும் மக்கள் பேசுவார்கள்

 இன்று கதை முற்றிலும் தலைகீழாக உள்ளது நேற்று வரை போலீஸ் நிலைய மதில் சுவற்றில் சாய்ந்து நின்று கட்டை பீடி அடித்தவன் இன்று எம்.எல்.ஏ ஆனவுடன் கோடி கோடியாக சம்பாதித்தால் அது அவன் திறமையாகவும் அறிவாகவும் பேசப்படுகிறதே தவிர அந்த பணம் எங்கே இருந்து வந்தது எப்படி வந்தது என்பதை பற்றி யாரும் வாய் திறப்பது இல்லை 


இன்னும் சொல்லப்போனால் அதை நினைத்து பார்ப்பது கூட கிடையாது ஊழல் செய்யாதே என்று யாராவது சொன்னால் அவரை மன நோயாளியாக பார்க்கும் கொடுமை நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது

ஊழலுக்கு எதிராக வாய் திறந்தால் அடி உதை கிடைப்பது இங்கு மட்டும் தான் பாபா ராம்தேவ் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை இதை நமக்கு உறுதிப்படுத்துகிறது

 அப்படி என்ன தவறான விஷயத்தை ராம்தேவ் கேட்டு விட்டார்?

  குத்ரோச்சிக்கும் சோனியா காந்திக்கும் உள்ள பண உறவை பற்றி கேட்டாரா?

  காமன் வெல்த் போட்டியில் காங்கிரஸ் காரர்கள் சம்பாதித்த பணத்தில் பங்கு கேட்டாரா?


 அலைக்கற்றை ஊழலில் கட்டுக் கட்டாக சுருட்டியதை தன்னிடம் கொடுத்துவிடுங்கள் என அடம் பிடித்தாரா?

 எதுவும் இல்லையே! நாட்டில் உள்ள கருப்பு பண முதலைகளை அடையாளம் காட்டுங்கள் ஊழலுக்கு எதிராக எதையாவது உருப்படியாக செய்யுங்கள் என்றுதானே கேட்டார்

 மக்கள் நலனை விரும்புகின்ற ஒரு அரசு தானாக செய்ய வேண்டிய ஒரு காரியத்தை நாட்டு குடி மகன் ஒருவன் கேட்டால் அதில் என்ன தவறு இருக்கிறது

 ஒன்று செய்கிறோம் என உறுதி மொழி தரலாம் அல்லது செய்ய மாட்டோம் என அறிவிக்கலாம் இரண்டும் இல்லாமல் இரவோடு இரவாக உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்து அநாகரிகமான ஒரு செயலை இந்த அரசு செய்திருப்பது இதன் பெயரில் மக்களுக்கு உள்ள நம்பக தன்மையை அழித்து விட்டது எனலாம்


 மத்திய அரசு முழுக்க முழுக்க ஊழல் நிறைந்தது ஊழல் வாதிகளுக்கு ஊக்கம் தருவது என்பது இந்தசெயல் மூலம் உறுதியாகி விட்டது

 ராம்தேவின் உண்ணா விரதம் சட்ட பூர்வமானது அல்ல என்றால் கபில் சிபில் சொல்வது போல் அவர் மக்களை ஏமாற்றுகிறவர் என்றால் அவரிடம் மத்திய அமைச்சர்கள் ஏன் தூது போக வேண்டும்?

உண்ணா விரதம் இருக்காதிர்கள் என்று ஏன் மன்றாட வேண்டும்?

 ஒரு வேளை ஊழலுக்கு எதிராக ஒருவர் பேசிவிட்டால் அவர் மன்மோகன் அரசாங்கத்தின் பார்வையில் ஏமாற்று பேர்வழியா?

 ராம்தேவ் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் புற்று நோய்க்கு மருந்து அளித்து மக்களை எமற்றுகிறாராம்

பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளாராம்


 தனது இருப்பிடத்தில் பல கோடி ரூபாய் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளாராம்

 இப்படி அரசாங்கம் சொல்கிறது சரி இதை ஒரு வாதத்திற்கு ஏற்று கொள்வோம்

ஏன் இதற்காக இத்தனை நாட்கள் பாபா ராம்தேவ் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை

 ஒரு வேளை ராம்தேவின் முறை அற்ற செயலுக்கு அரசாங்கம் இதுவரை துணை போனதா?

 அல்லது நாட்டில் நடப்பது என்ன என்பதை அறியாத மூடத்தனத்தில் இருந்ததா?

 ஊழலுக்கு எதிராக பாபா போர் கொடி தூக்கிய பின் இந்த குற்ற சாட்டுக்களை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

 


குறைகளை யாருமே கேட்க கூடாது என்பவன் ஜனநாயக வாதி அல்ல சர்வதிகாரி ஆவான்

 ஆங்கில அரசாங்கம் கூட காந்தியின் உண்ணா நோன்பை தைரியமாக எதிர் கொண்டதே தவிர காந்தியின் மீது புழுதி வாரி கொட்டியது கிடையாது

 ராம்தேவ் ஊழலுக்கு எதிராக குண்டு வைக்க வில்லை துப்பாக்கியை தூக்கி காட்டி மிரட்டவும் இல்லை தன்னை வருத்தியே போராட்டத்தை துவங்கினார்

 இதில் எந்த வகையிலும் வன்முறை இல்லை ஆனால் அரசாங்கத்தின் கோழைத்தனம் தேச நலம் விரும்பும் பலரின் மனதை கொதிப்படைய செய்திருக்கிறது

  ஒரு வேளை சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் திமுகவின் ஊழல் அரசுக்கு எதிராக தமிழக மக்கள் ஓட்டுப்போட்டதை கூட சட்ட விரோதம் என்பார்கள்

 காரணம் அலைக்கற்ற ஊழலின் கருணாநிதி குடும்பம் என்பது சிதறி விழுந்த சர்க்கரை துண்டுகளை சுவை பார்த்த எறும்புகளே ஆகும்

 பெரிய வெல்ல துண்டை பதுக்கி வைத்திருப்பது சோனியா குடும்பமே

 ராம்தேவ் அவர்கள் கேட்டப்படி கருப்பு பண வாதிகளை வெளியிட்டால் காங்கரஸின் பல மூத்த தலைவர்களின் உண்மை முகம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்

 இதை தவிர்ப்பதற்காகதான் ஆரம்பத்தில் பாபாவிற்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தார்கள் இப்போது காவல் துறையை ஏவி விட்டு துரத்தியும் அடிக்கிறார்கள்

 இவை எல்லாம் மக்கள் அறியாதது அல்ல புரியாததும் அல்ல

 வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு என்ற ஆயுதம் மக்கள் கையில் தான் உள்ளது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது

 அதை இப்போதாவது நினைத்து கொண்டால் திமுகவை போல் முற்றிலும் அழியாமல் தப்பிக்கலாம்

 இல்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் முற்று புள்ளி வைத்து விடுவார்கள்

No comments:

Post a Comment