Friday 17 June 2011

ஊடகங்களிடயே ஏன் இந்த மெளனம்



நன்றி அவர்கள் உண்மைகள்

சேனல்-4 என்ற தொலைக்காட்சி அம்பலப்படுத்திய ஸ்ரீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர செய்தி உலகளவில் பரபரப்பை உண்டாக்கி, தமிழ் மக்களின் மனதில் மட்டுமில்லாமல் ஐரோப்பிய மற்றும் மேலை நாட்டு மக்களின் மனதிலும் ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழக்கம் . ஆனால் சேனல் 4 ல் இந்த காட்சிகள் வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது.



தமிழகத் தலைவர்கள் யாரும் இதுவரை இதைப்பற்றி ஏதும் கூறாமல வாய்முடி மெளனம் காட்பது எதனால்? உண்மைகள் துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மனதில் உருவாகுகிறது.

சேனல் 4 நிகழ்வு புலிகளுக்கு ஆதரவானது என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அதில் புலிகள் செய்த குற்றச் செயல்களும் பக்கச்சார்பின்றி எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் சரணடைந்த ஒருவரை விடுதலைபுலி என்பதால் புறந்தள்ள முடியாது.



அத்தகையோரை பாலியல் பலாத்காரம் செய்து, சித்திரவதை செய்து, இறக்கும் போது அவமானம் செய்து, இறந்த பின்னும் அவமானம் செய்து, இது எமது நாடு என்று சிங்களத்தில் கொக்கரிப்பதை பார்த்த பின்னரும் தமிழக ஊடகங்கள் மௌனம் காப்பது ஏன்..? தமிழகத்தின் ஊடகங்களில் சேனல் 4 - ண் இந்த செய்தி ஒரு சுனாமி போல வந்து விழுந்த போதிலும் . அவர்கள் காக்கும் உறை நிலை மௌனம் ஆயிரம் அர்த்தங்களை பேசுகிறது.

எல்லா ஊடகங்களும் மத்திய அரசால் கட்டுப்படுத்தப் படுகிறதா? ஏன் எந்த நிலமை? தமிழ் சகோதர சகோதரிகளின் உயிர் மதிப்பு இல்லாமல் போய்விட்டதா?



வெளியான சேனல் 4 தொலைக்காட்சி நடைபெற்றது மன்னிக்க முடியாத போர்க் குற்றமே என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. போரில் ஈடுபடாத கலைஞரான இசைப்பிரியா பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு கொன்று வீசப்பட்டிருக்கிறார். சரணடைந்த பெண் புலி உறுப்பினர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு லாரிகளில் இழுத்து மிருகங்கள் போல எறியப்படும் காட்சிகள் வருகின்றன. மூன்று பெண்களை கைகளைக் கட்டிவிட்டு சுட்டுத்தள்ளுகிறார்கள். கைகளைக் கட்டி ஒருவரை சுடுவது போர்க்குற்றமாகும். காரணம் சரணடைந்துவிட்டார் என்பது கைகளை கட்டுவதன் அடையாளமாகும். அதன் பின்னர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட வேண்டுமே அல்லாது சுடுவதற்கு ஒரு படையினனுக்கு யாதொரு உரிமையும் கிடையாது.

இதை பார்த்த எனது மனம் துடிதுடிக்கிறது. தமிழ்க தலைவர்களே, தமிழக மக்களே இதை பார்த்த உங்கள் மனம் துடி துடிக்கவில்லையா?சூப்பர் ஸ்டார் உடல் நலமில்லை என்றதும் ஒடோடி சென்று பார்த்து கருத்து சொல்லிய தலைவர்களும் ஊடகங்களும் இப்போது எங்கே சென்றன அந்த நடிகர் தமிழக முதலைமச்சரிடம் பேசிய பேச்சை ஏதோ உலகில் நடக்காத அதிசியம் நடந்த்தை போல செய்தி வெளியிடும் நிறுவனங்களுக்கு இந்த செய்தி முக்கியமில்லையா? 

No comments:

Post a Comment