Saturday 30 July 2011

பாட்டி வைத்தியம்.- 1

ச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
[Image: food_peas.jpg]
* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.
[Image: food_peas.jpg]
* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.

அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
[Image: ht817.jpg]
* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.[Image: recvegbittergourd001-main.jpg]

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.


2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

தினமும் 75 கிராம் உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறைவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு 25 சதவீதம் குறையும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
[Image: apple89.jpg]
6 மாத காலத்திற்கு குறிப்பிட்ட அளவு உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்ததால் எல்.டி.எல் எனப்படும் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு 25 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

எல்.டி.எல் எனப்படும் கொழுப்பானது உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி இதய நோயை உருவாக்கும். இத்தகைய கொழுப்பை கட்டுப்படுத்த ஆப்பிள் உதவுகிறது.

ஆப்பிள்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் பாதிப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன. ஆப்பிளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் சாப்பிடும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது.

இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், எடை குறைகிறது. இந்த புதிய ஆய்வை கண்டுபிடித்த ப்ளோரிடா மாநில பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் டொக்டர் பக்ரம் அர்ஜ்மண்டி கூறுகையில்,"ஆப்பிள் சாப்பிடுவதால் கொழுப்பு பெருமளவு குறையும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று" என கூறினார்.



பித்த வெடிப்பு என்பது பெரும்பாலும் கால்களில் ஏற்படுவது.  கை கால்களில் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விள்ளகேண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் சேர்த்து தடவ குணமாகும்.

பித்த வெடிப்பு என்பது நமது பித்தம் அதிகமானால் வரக்கூடிய ஒன்றாகும்.

உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை 
10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வயிற்று பூச்சி தொல்லைத்தடுக்க வாய்விடங்காய் 5 கிராம், கடுகு, ரோகினி 5 கிராம், அவுரி ஐந்து கிராம், வேப்பன்கொழுந்து ஐந்து கிராம், தும்பை இலை ஐந்து கிராம் சுடுகோடு வாய்விடங்காய் லேசாக வறுத்து இலைகளை தனியாக இடித்து இரண்டையும் சேர்த்து மெழுகு பதமானவுடன் மிளகு அளவு உருண்டையாக செய்து நிழலில் உலர்த்தவும் ஐந்து வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இரண்டு மாதிரியும், இரவு படுக்க போகும் முன் கொடுக்கவும்.  வாரம் ஒரு முறை அல்லது மூன்று வாரங்கள் கொடுக்க பேதி ஆகாது.  இம்மருந்து வயிற்றில் உள்ள பூசிகளை அடியோடு ஒழிக்கும்.  பெரியவர்களும் சாப்பிட பூச்சி தொல்லை அறவே ஒழியும்.

அல்சர் குணமாக கற்பூர வாழைக்காய் வாங்கி தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி காயவிடுங்கள்.  நன்றாக காய்ந்தவுடன் பவுடராக ஆக்குங்கள்.  ஏலக்காய் பொடி செய்து கொள்ளுங்கள்.  வாழைக்காய் பவுடர் 500 கிராம், பனங்கல் கண்டு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் இந்த பௌடரை அரை கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

அதுமட்டுமல்லாமல் கற்பூரவாழை பழம் உடலழகுக்கு மிக நல்லது.
உன்னுடை
பொதுவாக பெண்களுக்கு வருகின்ற புற்று நோயில் மார்பகப் புற்று நோய் இரண்டாவது முக்கிய நோயாகும் (கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் முதல் இடத்தில் இருக்கின்றது) 35 வயதிற்கு மேல் ஏற, ஏற இந்த நோய் தாக்கப் படுவதற்கான அபயம் அதிகரிக்கிறது.  மாதவிடாய் ஆகின்ற பெண்களை விட மாதவிடாய் நிதர பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது.

மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் எவை?

1. முதல் குழந்தை பேறு 35  வயதிற்கு மேற்பட்டு உண்டானாலும் அல்லது குழந்தை பேறு இல்லாமல் இருந்தாலும் இந்த நோய் வருவதற்கு வேண்டிய அபாயங்கள் அதிகம்.  அதிகமான குறை பிரசவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தாலும் அல்லது விரைவில் நிறுத்தினாலும் நோய் வர அதிக வாய்ப்பிருக்கிறது.

2. அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவை உண்பவர்களுக்கும், அதிகமாக மது அருந்துபவர்களுக்கும், உடல் பருமனாகக் கொண்டவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

3. தொடர்ந்து கதிர் வீச்சுக்கு உட்படுபவற்குளுக்கும், மார்பக புற்றுநோய் வருவதற்கு வேண்டிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

மரபு அணு வழியாக இந்த நோய் பரவுமா?

மரபு அணு வழியாக மார்பகப் புற்று நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  10% மார்பக புற்றுநோய் மரபு அணு வழியாக பரவுகிறது. முக்கியமான மரபு அணுக்கள் BRCA-1, BRCA-2.

30 வயதிற்கு உட்பட்டு மார்பக புற்றுநோய் வந்தாலோ, பரம்பரையில் மூன்று பேருக்கு மேற்பட்டு இந்த நோய் தாக்கப் பட்டு இருந்தாலோ ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் புற்றுநோய் வந்தாலோ, இரண்டு மார்பகத்திலும் புற்றுநோய் வந்தாலோ மரபணு வழியாகவர பயப்பு உள்ளது.

சாதாரண மார்பக கொழுப்பு கட்டி மார்பக புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

Jibroma போன்ற கட்டிகள் புற்றுநோயாக மாறவே மாறாது.  ஆனால் சாதாரண கட்டியில் ATYPI CAL இருந்தால் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது.

மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் எவை?

மார்பகத்தில் கட்டி காணப்படுதல் அந்த காடியில் வலி ஏற்படுதல் மார்பக காம்பில் நீர் போன்ற திரவ வடிதல்

மார்பக புற்று நோயிற்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

அறுவை சிகிச்சை முறை, நுண் கதிர் சிகிச்சை முறை, புற்றுநோய் மருந்து செலுத்துதல் முறை ஆகியவைகள் உள்ளன.

அறுவை சிகிச்சை முறையில் என்ன முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு பதில் இங்கே உள்ளது.  முன்பெல்லாம் முழு மார்பகத்தை எடுத்துதான் குணப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை முறை இருந்தது.  ஆனால் இன்றோ கட்டி சிறியதாக இருந்தால் கட்டியை மட்டும் அகற்றி மார்பகத்தின் அழகும், அளவும் முற்றிலுமான குணப்படுத்த வேண்டிய முறை பின்படுத்தப்படுகிறது.

நோயை தடுக்கும் முறைகள் என்னென்ன?

குழந்தை பேற்றை இருபதில் இருந்து இருபத்தைந்து வரை வைத்துக் கொள்ளவேண்டும்.  தேவையற்ற கரு கலைப்ப்பைத் தவிர்க்க வேண்டும்.  குழந்தைகளுக்கு நீண்ட காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.  கொழுப்பு சாது நிறைந்த உணவை குறைக்க வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.  உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

மார்பக புற்றுநோயை மிக ஆரம்ப நிலையில் கண்டறிய முடியுமா?

நிச்சயமாக முடியும்.  மோனோ கிராம் என்ற பரிசோதனையின் மூலம் மார்பகத்தில் கட்டி வருவதற்கு முன்பே மார்பக புற்று நோய் கண்டறிய முடியும். மார்பக புற்றுநோயின் மகள்களும், சகோதரிகளும் இந்த பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.  எல்லா பெண்களும் மார்பக புற்றுநோயை பற்றி முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.  புற்றுநோய் வருவதை தடுக்கும் முறைகளை அறிந்து அதற்கான முழு முயற்சிகாலையும் செய்யவேண்டும்.  நோய் வந்தவர்களும் வைத்திய முறையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து பயத்தை தவிர்த்து தைர்யமாக இருக்கவேண்டும்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment