Tuesday 30 August 2011

அறிவோம் ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.


காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்) என்பது குறிப்பிடத் தக்கதாகும். இன்று பல சடங்குகள் அர்த்தம் புரியாமல் செய்கிறார்கள் என்றும், மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்த்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்றும் தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார்.

தாத்தாச்சாரியர் அவர்கள் ஹிந்து மத வேதங்களை எல்லாம் கற்ற மாமனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது என்ற அளவுக்கு ஹிந்து மத வேதங்களில் அறிவு முதிர்ச்சி பெற்றவர். இவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் ஹிந்து மத வர்ணாசிரம கொள்கையையும், அதில் கொட்டி கிடக்கும் மூட நம்பிக்கைகள்,ஜாதி வெறி, ஏற்றதாழ்வுகள் குறித்தும் ஹிந்து மத மக்களுக்கு தெரிவித்த இந்த நூற்றாண்டி சிறந்த அறிவு ஜீவிகளில் இவரும் ஒருவர்.

அவர் எழுதிய ஹிந்துமதம் எங்கே போகிறது, சடங்குகளின் கதை போன்ற நூல்களில் இந்து மதச்சடங்குகளை,சம்பிரதாயங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார். சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள இந்நூல்கள் பெரிதும் உதவும். எந்தக் காலத்திற்கோ ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருத சடங்குகளை தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? அவைகளைத் தூக்கி எறிய வேண்டாமா? என்ற கேள்வியே இந்நூலைப் படித்த போது எழுகிறது.

நூல்: சடங்குகளின் கதை, இந்துமதம் எங்கே போகிறது? ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14 பக்கம் 152 ரூ. 75.

No comments:

Post a Comment