Tuesday 13 September 2011

இருமல் குணமாக

இருமல் குணமாக அரச மரத்துப்பட்டையை பொடியாக்கி  காயவைத்து பின் வறுத்து கரிபோல் ஆனவுடன் தூள் செய்து கொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு கரண்டி அளவு பொடித்தூளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடித்து வர நல்ல பலன் தெரியும்.

நாள் தவறாமல் துளசி இலைகளை காலையில் வெறும் வயற்றில் சாப்பிட்டு வர இருமல் சளி அறவே நெருங்காது.

சளிப் பிடிப்பதில் பெரும்பங்கு நாம் குடிக்கும் தண்ணீரே காரணம். ஆகவே எந்த தன்நீரானாலும் காய்ச்சி குடித்து பழகுங்கள்.  வெளியில் சென்று உணவு எடுத்துக்கொள்ள நேரிட்டாலும் காய்ச்சிய நீர் அல்லது அகோபினா அண்ட் கின்லே போன்ற தரமான பாக்கேஜ் குடிநீரை குடிக்க பழகினால் சளி பிடிப்பதில் இருந்து தப்பிக்கலாம்.

உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment